Skip to main content

Posts

Showing posts from August, 2009

மாவை வரோதயனின் இழப்பு தமிழ் இலக்கிய உலகில் மற்றுமொரு பாரிய இழப்பாகும்.

என்னுடைய எழுத்துக்களுக்கு முதலாவது ரசிகராகவும், விமர்சகராகவும், அவற்றிலும் பார்க்க நான் எழுதுவதற்கு பிரதான காரணங்களாக இருந்தவர்களில் ஒருவரான மாவை வரோதயனின் இழப்பு மிகவும் வருத்தத்திற்கு உரியதாகும். அவருக்கு எனது இறுதி அஞ்சலியை செலுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதுடன் தேசிய கலை இலக்கியப் பேரவை அவரது மறைவுக்காக விடுத்துள்ள ஊடங்களுக்கான செய்திக் குறிப்பை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன். ஊடக செய்திக் குறிப்பு தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்குழு உறுப்பினராக எம்மோடிணைந்து செயலாற்றி வந்த கவிஞருங் கட்டுரையாசிரியரும், விமர்சகரும், நாடகாசிரியரும் ஆர்வலருமான ஈழத்தின் முக்கிய இலக்கியவாதிகளுள் ஒருவருமான மாவை வரோதயன் எனும் பேரால் இலக்கிய உலகம் அறிந்த சி.சத்தியகுமாரன் அவர்களது பிரிவுச் செய்தி தேசிய கலை இலக்கியப் பேரவையை மிகுந்த துயரில் ஆழ்த்தியுள்ளது. செயலூக்கமிக்க ஒரு உறுப்பினராகத் தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் நீண்ட காலம் இணைந்து அதற்கு ஆதரவாயிருந்து அதன் நிகழ்ச்சிகட்கு உறுதுணையாய் செயற்பட்டு ஊக்குவித்ததில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. தேசிய கலை இலக்கியப் பெரவையின் சஞ்சிகை

தொலைநோக்கி - பிறந்த கதை

இன்றைய தினத்துடன் (25-08-2009) வானியலின் தந்தை கலீலியோ கலிலி தொலைநோக்கி என்ற அரிய பொருளை கண்டுபிடித்து 400 வருடங்கள் பூர்த்தியாகின்றன . அதன் நினைவாக , கலீலியோ கலிலியின் தொலைநோக்கி கண்டுபிடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்த வானியல் சாதனைகள் தொடர்பில் ஒரு கட்டுரை எழுதலாம் என்று தோன்றியது . 1609 ஆம் ஆண்டில் கலீலியோ என்ற வானியலாளர் தொலைநோக்கி ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்தியதன் 400 ஆவது ஆண்டு கொண்டாட்டமாக இந்த ஆண்டு (2009) சர்வதேச வானியல் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , இந்த கட்டுரை பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கின்றேன் . 1608 ஆம் ஆண்டிலேயே தொலைநோக்கிகள் உருவாக்கப்பட்ட போதிலும் கலீலியோதான் நல்ல திறனுடைய தொலைநோக்கிகளை உருவாக்கினார் . கலீலியோ தொலைநோக்கிகளை உருவாக்கியதோடு நிற்கவில்லை . அதைக் கொண்டு வானை ஆராய முற்பட்டார் . வானில் நம் கண்ணால் பார்க்கக்கூடிய பூமியின் துணைக்கோளான சந்திரனில் தொடங்கி , பிறகோள்கள் , நட்சத்திரங்கள் , வானில் பறக்கும் எரிகற்கள் என அனைத்தையும் கவனிக்கத் தொடங்கினார் . கவனித்ததோடு நில்

கந்தசாமி – அப்படியும், இப்படியும்…

க ந்தசாமி … சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக விக்ரம் ரசிகர்களையே காத்திருக்க வைத்த திரைப்படம் . கடைசியாக வெளிவந்த விக்ரமின் “ பீமா ” திரைப்படம் பாரிய வெற்றியை சந்தித்திருக்காத நிலையில் , புதிய இயக்குநர்களின் வரவு , சூர்யா போன்றோரின் அர்ப்பணிப்புடனான நடிப்பு போன்ற பல போட்டிகளுக்கு மத்தியில் கந்தசாமி படம் வெளிவந்திருக்கின்றது . படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே பல பிரமாண்டங்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் அதிகரித்திருந்தன . படபூஜைக்கான அழைப்பிதழ் , படப் பாடல் வெளியீட்டின் போது கிராமங்களை தத்து எடுத்தமை என ஆரம்பம் அதிரடியாக இருந்த நிலையில் , படவெளியீடும் 1000 பிரதிகளுடன் பிரமாண்டமாகவே இருந்தது . தர்க்கரீதியாக பல ஓட்டைகள் நிறைந்த 3 மணித்தியாலங்கள் நீளமான படத்தின் கரு மிகவும் பழைய கதை . சங்கரின் படங்களில் பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட விடயம் . மிக அண்மையில் சிவாஜியில் கூட இந்த விடயம் தான் கூறப்பட்டிருந்தது . கருப்பு பணத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் முறை . சற்று மாறுப்பட்ட முறையை சுசிகணேசன் கந்தசாமிய

உலக மனிதாபிமான தினம்: வருந்திப் பாரஞ் சுமப்பவர்கள்

சர்வதேச ரீதியாக இயங்கி வரும் நிவாரணப் பணியாளர்கள் அல்லது தொண்டர்களை கௌரவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை இன்றைய தினத்தை ( ஆகஸ்ட் 19) உலக மனிதாபிமான தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது . முதலாவது உலக மனிதாபிமான தினம் என்ற ரீதியில் இன்றைய தினம் சிறப்பு பெறுகின்றது . சர்வதேச ரீதியில் நிவாரணப் பணியாளர்களின் செயற்பாடுகளை அங்கீகரிப்பதுடன் அவர்களுக்கான இடத்தை சமூகத்தில் பெற்றுக் கொடுப்பதே இந்த தினம் பிரகடனம் செய்யப்பட்டதற்கான ஐ . நாவின் பிரதான நோக்கமாக உள்ளது . ஈராக்கின் , பாக்தாத்தில் அமைந்துள்ள ஐ . நாவின் அலுவலகம் மீது 2003 ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு 22 பேர் கொல்லப்பட்ட 6 ஆவது வருட நிறைவு நாளையே உலக மனிதாபிமான தினமாக ஐ . நா பிரகடனப்படுத்தியுள்ளது . நிவாரணப் பணியாளர்கள் பலவிதமான சிரமங்களுக்கு மத்தியிலேயே தமது கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர் . விசேடமாக உலகில் உள்நாட்டு யுத்தங்கள் , எல்லைப் பிரச்சினைகள் , இயற்கை அனர்த்தங்கள் போன்ற சம்பவங்கள் நடைபெறும் இடங்களே , இவர்களது பணியிடங்களாக காணப்படுவது கவன

ஞாபகங்களை சேமித்தல்

சுழன்று அடிக்கும் ஞாபகங்களை பொறுக்கியெடுத்துக் கொண்டேஓடிக் கொண்டிருக்கின்றேன். கடற்கரை மணலில் புதைந்து விளைந்த வரிசையாக தொடரும் பாதச் சுவடுகள் கலைத்த அலைகளின் வேகத்தில் பாதந் தொட்டு உச்சி சிலிர்த்த விநாடிகள்…. அப்படியே உணர்வுகளை பேசவிட்டு வெட்கங்களை விலக்கி ஒன்றாக்கி உயிர் கலந்த கணம்… ஒன்றையும் மறக்காது முடிச்சுக்களை கடந்து செல்லும் ஞாபகங்களை பொறுக்கியெடுத்துக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றேன். முதல் பார்வையிலேயே உயிர் வேர்க்க சிலிர்த்தெழுந்த மயிர்க்கால்களின் ஆவேசம்….. உன் விரல்பட்ட பொழுதன்றில் புயல் கடந்த மனமகிழ்வு… உன் இமை மடிந்த மாத்திரையில் உடல் பருகிய களவு.. ஓரிரவில் எனை சிறைவைத்த விரல் கம்பிகளின் நுனி கீறிய வடுக்கள்…. எதையும் தொலைக்காது பத்திரமாய் ஞாபகங்களை பொறுக்கியெடுத்துக் கொண்டே ஒடிக் கொண்டிருக்கின்றேன். பிறந்தநாளொன்றின் முதல் வாழ்த்தில் இதழ்களை பேசிக் கொள்ளச் செய்த பரிசுணவை… திகட்டாமல் புசித்துக் கொண்ட…. மழைகாலத்து நிலவின் நிழலில் சராசரி குறைந்த உடல்வெப்பம் இணையாக்க உடல் போர்வை போர்த்திவிட்டு என் உடல் வெப்பம் காத்த…. அத்தனையையும் சிதறாது சேமிப்பதாய். ஞாபகங்களை பொறுக்கியெடுத

காதலிச்சு...

ஓன் பேர பச்ச குத்தி பட்ட காயம் ஆற முன்ன…. ஓன் கல்யாண பத்திரிக்க கொண்டு வந்து நீட்டுறியே…. என் கைய புடிச்சிகிட்டு கடலோரம் நடக்கயில….. நீ தந்த வாக்கெல்லாம் காத்தாகி போயிடுச்சே….. ஒன்னால நா பட்ட காயமெல்லாம் ஆறிரும்… ஆனா….ஒன் மொகத்த என் மனசு எப்படி மறக்கும்….. தலைவார போகயில…. கண்ணாடியில ஒன் மொகந்தானே தெரியுது… கண்ண மூடி அசரயில ஏன் புள்ள கனவுல நீ வந்து தொலைச்ச…. என்ன விட்டு இப்போ நீ போயி தொலைஞ்ச…. பாசந்தான் பெரிசுன்னு நீ பிரிஞ்சு போன…. நா வெச்ச பாசத்த நீ நெனச்சு பாக்கலியே…. நீ பாக்க ஒன் முன்னாடி நா ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்னு நீ சொன்ன கடசி வார்த்த…… அப்ப தானே நா முழுசா செத்துப் போனேன்… போதும் புள்ள நீ வெதச்ச நெனப்பெல்லாம் என மனசோரம் அழியாம நெறஞ்சிருக்க…. ஒனக்கொண்ணும் ஆகம.. நீ சொகமா இருக்கணும் ஒன் கைபுடிக்கும் மகராசன் ஒன் உசிராக இருக்கணும்…. எனக்கொன்னும் கொறவில்ல… நாயிருப்பேன் கல்லாட்டம்… நீயில்லாத நா கல்லு தானே…. ஓன் நெனப்போட நா இருப்பேன். என் உசிரு என்ன விட்டு போனாத்தான்… ஒன் நெனப்பும் மறஞ்சி போகும்…. ஒரு வித்தியாசமான முயற்சி. கடந்த பதிவில் நான் மரித்தவன்னு ஒரு கவிதை எழுத முயற்சி செய்திரு

நான் மரித்தவன்....

நீண்ட மௌனம்…. திடீரென பீறிட்டு எழும் அழுகுரல்கள்…. சிறு வயது முதல் நான் கேட்டுப் பழகிய குரல்கள்…. எழ முயற்சிக்கிறேன். அவர்கள் ஏன் அழுகிறார்கள்…. என் கண்கள் பார்வையற்றதாகி…. எல்லாமே இருளாக இருக்கின்றது…. என்னால் அசையமுடியவில்லை நன்றாகப் பழகிப் போனவர்களின் குரல்கள் வெகு அருகில் பின் விலகிப் போகின்றன. நேரம்…காலம்….. எதுவுமே தெரியவில்லை…. எல்லாமே இருளாக இருக்கின்றது… கண்கள் மூடித்தானே இருக்கின்றன…. உறங்க முயற்சிக்கின்றேன்… முடியவில்லை….. கைகள், கால்கள், உடல் எதுவுமே அசைவதாயில்லை… திடீரென அழுகுரல்களின் ஒலி அதிகரிக்கின்றது அப்படியே அழுந்தி மெதுவாக குறைகின்றது…. உடலில் சின்னதாய் அசைவு….. சிறிது நேரத்திற்கு அமைதி….. என் உடலின் அசைவு நிற்கின்றது… மீண்டும் அதே அழுகுரல்கள்… மிக நெருக்கமாய் கேட்கின்றன…. சிறிது சிறிதாய் குறைகின்றன…. உடல் தகிப்பதை போல் ஒரு உணர்வு….. ஒரே புழுக்கமாய் இருக்கின்றது….. என் உடல் எரிகின்றது… எல்லாம் இப்போது எனக்கும் புரிகின்றது… நான் மரித்துவிட்டேன்…. அண்மையில் சிக்மன் புரொய்ட் எழுதிய கட்டுரை ஒன்றினை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது . " ஒவ்வொரு மனிதனும் ஆழ்மனதி

பித்து

அதோ அங்கே ஒரு உருவம்…. வெள்ளையுடை, சிறகுகள் கையில் மந்திரக்கோல்…. அந்தரத்தில் பறந்தபடி…. ஒரு சிறுமி….. பள்ளியில் படித்த தேவதையைப் போல்…. நெருங்கிச் செல்கிறேன். மிக நெருங்கி…. வெள்ளையுடை இல்லை… கையில் கோல் இல்லை….. சிறகுகளை காணவில்லை…. கந்தல் உடை… அகோரமாக…. கையில் இரத்தம் வடியும் குழந்தை சிவந்த கண்கள்…. சிறகுகளுக்கு இருந்த இடத்தில்…. சிலுவையொன்று… மெல்ல மெல்ல அசைகிறது என்னை நோக்கி அந்த சிறுமியின் உருவம்….. ஒடத் தொடங்குகிறேன்… ஓடிக்கொண்டேயிருக்கின்றேன்…. மிகநெருக்கமாய் அந்த உருவம்…. மிக மிக நெருக்கமாய்….. மண்டையோடுகளையும்…. அழுகுரல்களையும்…ஒநாய்களின் ஒலங்களையும் தாண்டி… என் ஓட்டம் நிற்கவில்லை….. ஆனால் மிக நெருக்கமாய் அந்த உருவம்….. இப்போது இன்னும் விகாரமாய்….. கையில் இருந்த குழந்தையை காணவில்லை….. சிலுவையும் மறைந்துவிட்டது. சிறகுகள்…மந்திரக்கோல்…வெள்ளையுடை…. என்னைத் தாண்டி அந்த உருவம் பறந்து செல்கின்றது.. களைத்து அமர்கிறேன். தோல்களில் சுமை…கையில் இரத்த வாடை… என் கால்களை இறுக்கிப் பிடித்தவாறு அந்த குழந்தை….. என்னைப் பார்த்து சிரிக்கின்றது… எழ முயற்சிக்கிறேன்… கால்கள் சுயநினைவற்று….. கண்கள்