Skip to main content

தேவதையிடம் 10 வரங்கள்: காதல் விண்ணப்பம்

பொதுவாகவே, இந்த தேவதை, கடவுள், வரங்கள் போன்ற சமாச்சாரங்களில் துளியளவும் நம்பிக்கை இல்லாதவன் நான். இருந்த போதிலும், சகா லோகநாதன் அனுப்பிய தொடர்பதிவுக்கான சங்கிலியை எவ்விதத்திலும் துண்டாடி விடாது, அவரது அழைப்புக்கான கௌரவமாக இந்த பதிவை இடுகின்றேன். இங்கு நான் வரம் கேட்பதற்காக அணுகும் தேவதை கொஞ்சம் மாறுபட்டவள். சிறு வயதில் பாட்டி சொல்ல கேட்ட தேவதை கதைகள், அதைத் தொடர்ந்து கனவில் வந்து பணக்காரனாக, நடிகனாக, விளையாட்டு வீரனாக, கவிஞனாக என என்னை மாற்றிய தேவதைகள் நிறையவே உண்டு. கையில் ஒரு மந்திரக்கோல், இறக்கைகள், வெள்ளைநிற உடை, சுற்றி பிரகாசம் என்று கற்பனையிலும், திரை காட்சியிலும் கண்ட தேவதைகளின் உருவம் இது.
இவையெல்லாவற்றையும் விட, இந்த வயதில் என்னில் (எம்மில்) வரும் தேவதையிடம் (அதுதான் புரியலையா, காதலி) கேட்கும் வரங்கள் என்று சொன்னால், 10 என்பது கொஞ்சம் அதிகம் தான். என்னைப் பொறுத்தவரையில் இந்த தேவதையும், இன்று வரையில் வெறும் கனவாகவே இருப்பதனால், இன்னும் சிக்கல் தீர்ந்தபாடாயில்லை. என்ன செய்வது என்ற குழப்பத்தில், இறுதியாக என்றோ ஒருநாளில் என் வாழ்நாளில் இடம்பிடிக்கப் போகும் என்னில் பாதி, எனது துணைவி எனக்குத் தேவதைதானே. அதனால், இல்லாத, இனிவராத தேவதையை தேடி வரம் கேட்காமல், என்னில் கலக்கப் போகின்ற தேவதையிடம் நான் கேட்கும் வரங்களாக (ஒரு காதல் விண்ணப்பம். ஹாஹாஹாஹாஹா) இதை எழுதுகின்றேன். சகா லோகநாதன் இதை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.

முதலாவது
வரம்

பரஸ்பர புரிந்துணர்வு. நீ என்னைப் புரிந்துகொள்ளவும், நான் உன்னைப் புரிந்து கொள்ளவும் வேண்டும். அன்பின் நிலைத்திருக்கும் தன்மைக்கு புரிந்துணர்வே பிரதானமானதாக இருக்கின்றது.

இரண்டாவது வரம்
அன்பு, என்னில் நீயும், உன்னில் நானும் நமக்கான வாழ்விற்கு அஸ்திவாரம்.

மூன்றாவது வரம்
பகிர்தல், நமக்குள் எவ்வித மறைவும் இன்றி, நாம் வெளிப்படையானவர்களாக இருக்க வேண்டும். என்னை நீ அறிந்து கொள்ளவும், உன்னை நான் அறிந்து கொள்ளவும் இது அடிப்படையாக அமையும்.

நான்காவது வரம்
நமக்கான தனிமை, குடும்ப வாழ்வின் இன்றியமையாத பகுதி.

ஐந்தாவது வரம்
அரவணைப்பு, உனக்கான துயரங்களில் நானும், எனக்கான துயரங்களில் நீயும் ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொள்ளல்.

ஆறாவது வரம்
இணைந்த தலைமைத்துவம், நமது குடும்பத்தில் நாம் தலைவர்கள். ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில், ஏக தலைவனாக என்னை மாறவிடாது, நாம் இருக்கும் சமத்துவ சந்தர்ப்பம்.

ஏழாவது வரம்
நட்பு. கணவன், மனைவி என்ற வட்டத்துக்குள் மாத்திரம் நம்மை அடைத்துக் கொள்ளாது, நல்ல நண்பர்களாக எமது வாழ்க்கையை தொடரும் அந்நியோன்னியம்.

எட்டாவது வரம்
பிரிவற்ற உறவு. எந்த சந்தர்ப்பத்திலும் நீ என்னை பிரியாது, நான் உன்னை பிரியாது, வாழ்வின் சிக்கல்களை கலந்து பகிர்ந்து கொள்ளும் உறவு.

ஒன்பதாவது வரம்
ஆளுமை. எனது தவறுகளை திருத்தவும், என்னை ஆற்றுப்படுத்தவும் கூடிய ஆளுமை. நமக்கான உலகில் நாமாக தீர்மானிக்கக் கூடிய விடயங்கள் அதிகம் இருக்க வேண்டும். ஆணாதிக்கம் என்பது என்னுள் எந்த கணத்திலும் தோன்றிவிடாது நீ என்னில் சமத்துவத்தின் பகுதியாக இருக்க வேண்டும்.

பத்தாவது வரம்
நாம் இந்த உலகில் மனிதர்களாக மாத்திரம் இருக்க வேண்டும். மதம், ஜாதி, வர்க்கம், குடி என்ற அடையாளங்களுக்குள் எம்மை திணித்துக் கொள்ளாது.
10 வரங்கள் என்றதுமே, அட 10 தானே என ஆரம்பித்து, ஐந்தை எட்டியதுமே கண்ணை கட்டிவிட்டது. இருந்தாலும், நீண்ட நாட்களுக்குப் பின்னர் மூளையை கசக்கிப் பிழிந்து என்னுடைய கனவுகளை பதிவிட்டு விட்டேன். எல்லாம் முடித்த பின்னர் சங்கிலிக்கு தொடர்பு கொடுக்க இன்னும் 5 பேரை அழைக்க வேண்டும் என்ற நிபந்தனை வேறு வந்துவிட்டது. ஆனாலும், அதில் இருந்து தப்பிப்பதற்கும் ஒரு வழி, அண்மையில் சக பதிவர் ஒருவரின் தொடர்பதிவில் கண்ட வாசகம், இப்போது பயனளிக்கின்றது. அதாவது, இந்த தொடர்பதிவை வாசித்து விட்டு, “அட நானும் தேவதையிடம் வரங்கள் கேட்கணும்” அப்படின்னு நினைக்கின்ற அனைவரும் சங்கிலியில் இணைந்து கொள்ளலாம். அப்படியே நம்மதான் உங்கள அழைச்சது அப்படின்னும் சின்னதா ஒரு குறிப்பு போட்டுடீங்கன்னா ரொம்ப மகிழ்ச்சி.

வந்ததுதான், வந்தீங்க அப்படியே ஒரு வாக்கு போட்டுட்டு போயிருங்கோ!!!!!

Comments

  1. நன்றிகள்,வாழ்த்துக்கள் ...
    நிச்சயமாக உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ... .....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….