கால சுழற்சியின் பெரு நெருப்பில் தனிமையின் நிழலாய் வளர்ந்து செல்லும் நிசப்தத்தில் ஆளரவமற்ற வீதி எதையோ உணர்த்திச் செல்கிறது பார்வைக்கு எட்டிய தூரம் வரை உன் நினைவுகளைத் தவிர எதுவுமேயில்லை .... வெயிட்காலப்பொழுதுகளில் நிழலாய் தொடரும் உன்னை விலக்கி வைத்துவிட்டு இருளை விழுங்கி பயங்கர மௌனத்தையும் அச்சத்தையும் பிரசவிக்கும் கொடுரமான தனிமையில் பயணிக்கிறேன் .... எஞ்சியிருக்கும் வாழ்வில் ........
நான் வாழ்ந்த நிமிடங்களை வாசிக்கவும்... வாழும் நிமிடங்களை ரசிக்கவும்... வாழப்போகும் நிமிடங்களை நேசிக்கவும்...