Skip to main content

அமைதியை தேடி...

இரத்தம் தெறிக்கும் தேசம்
மயிர்க்கால்கள் வீங்க
தன்னையும் அறியாது
சிறுநீர் கழிக்கும் சிறுவன்.....
பேருந்து நெரிசலில் ,
தொலைந்து போன
ஒரு மாத வியர்வை ,
விண்மீன்களை போட்டிக்கழைக்கும்
தொடர் மாடி வீடுகள் ,
தொழில்நுட்ப நெரிசலில்
வீதியோர சந்திப்பில்
போலி புன்னகை ,
இத்தனைக்கும் மத்தியில்
கடற்கரை நோக்கி பயணிக்கும் கால்கள்,
அமைதி தேடி...........

(இந்த கவிதையும் "பயில்நிலம்" இதழில் வெளிவந்த ஒன்று தான். குழலி என்ற புனைப்பெயரில் எழுதியிருந்தேன். என்னால் எழுதப்பட்டு எனக்கு பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று)

Comments

Popular posts from this blog

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற...

கந்தசாமி – அப்படியும், இப்படியும்…

க ந்தசாமி … சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக விக்ரம் ரசிகர்களையே காத்திருக்க வைத்த திரைப்படம் . கடைசியாக வெளிவந்த விக்ரமின் “ பீமா ” திரைப்படம் பாரிய வெற்றியை சந்தித்திருக்காத நிலையில் , புதிய இயக்குநர்களின் வரவு , சூர்யா போன்றோரின் அர்ப்பணிப்புடனான நடிப்பு போன்ற பல போட்டிகளுக்கு மத்தியில் கந்தசாமி படம் வெளிவந்திருக்கின்றது . படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே பல பிரமாண்டங்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் அதிகரித்திருந்தன . படபூஜைக்கான அழைப்பிதழ் , படப் பாடல் வெளியீட்டின் போது கிராமங்களை தத்து எடுத்தமை என ஆரம்பம் அதிரடியாக இருந்த நிலையில் , படவெளியீடும் 1000 பிரதிகளுடன் பிரமாண்டமாகவே இருந்தது . தர்க்கரீதியாக பல ஓட்டைகள் நிறைந்த 3 மணித்தியாலங்கள் நீளமான படத்தின் கரு மிகவும் பழைய கதை . சங்கரின் படங்களில் பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட விடயம் . மிக அண்மையில் சிவாஜியில் கூட இந்த விடயம் தான் கூறப்பட்டிருந்தது . கருப்பு பணத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் முறை . சற்று மாறுப்பட்ட முறையை சுசிகணேசன் கந்தசாமிய...

நினைவு உருமாற்றம்....

என் காதலில் உனக்கான இடத்தை வெறுமைப்படுத்த முடியாது ஆழ்ந்து கிடக்கிறது அறிவு.... என்னை மறந்து உன்னை மாத்திரம் நினைத்துக் கொண்டிருக்கும் நினைவு உருமாற்றத்தை செய்து விட்டு போய்விடுகிறது காதல்...... உன் மீதான காதலின் அறிகுறியாய் உறக்கம் இன்றி கலைந்த இரவுகளும், நட்சத்திரங்களை தேடிக் கதைத்த தனிமையும் என்னோடு நீங்காமல் இருக்கின்றன. உன்னால் நிராகரிக்கப்பட்ட காதலின் கனவுகள் ஆளில்லா வெளியில் விரவி உறக்கத்தை திருடிக் கொண்டிருக்கின்றன...... நீ வசிக்கும் தெருமுனை கடக்கும் ஒவ்வொரு பொழுதும் இதயம் திரும்பிப் பார்க்கின்றது. நீ நடந்து சென்ற வழியில் பூத்துக் கிடக்கும் என் காதலை...