Skip to main content

எங்கள் பூமி..... எங்கள் இயற்கை.....

செவ்விந்தியத் தலைவர் சீயட்ல் (Si’ahl ), தம்முடைய பாராம்பரிய நிலம் தொடர்பில் எழுதிய கடிதம்.செவ்விந்தியர்களின் பாரம்பரிய உறைவிடத்தை அமெரிக்க அரசாங்கம் கையகப்படுத்தும் முயற்சியின் போது இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.இந்த கடிதம் 1855ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இணையத்தில் ஆங்கிலத்தில் கிடைத்த அந்த அரிய கடிதத்தை தமிழில் மொழிபெயர்க்கும் சிறுமுயற்சி இது. திட்டமிட்ட குடியேற்றம், பலவந்தமான குடியேற்றம் என அன்றாட செய்திகளில் செவிமடுக்கும் சந்தர்ப்பங்களில் இந்த கடிதம் நமக்கும் ஒரு செய்தியை சொல்லத்தான் செய்கின்றது.
"உங்களால் வானத்தையும், நிலத்தின் அனலையும் வாங்கவோ அல்லது விற்கவோ எவ்வாறு முடியும்? உங்கள் சிந்தனை எமக்கு விசித்திரமாக இருக்கின்றது. நாங்கள் சுத்தமான காற்றையும், பிரகாசமான நீரையும் கொண்டிராவிட்டால் உங்களால் எவ்வாறு அதனை வாங்க முடியும்?

இந்த பூமியின் ஒவ்வொரு பகுதியும் என் மக்களுக்காக பூஜிக்கப்பட்டது. பிரகாசிக்கும் ஒவ்வொரு பைன் மரங்களும், கரையின் மணல் துகள்கள் ஒவ்வொன்றும், கரும்பலகைகளில் காணப்படும் ஒவ்வொரு துளி பனியும், ஒவ்வொரு பூச்சிகளும், நினைவுகளில் புனிதமாகவும், என் மக்களின் அனுபவங்களாகவும் இருக்கின்றன. இந்த மரங்களின் வளர்ச்சிக்கு காரணமான தாவரப் பால்கள் சிவப்பு மனிதர்களின் நினைவுகளை சுமந்து செல்கின்றன.

நட்சத்திரங்களுடன் சேர்ந்துகொள்ளும் பயணத்தில் வெள்ளை மனிதனின் இறப்பு, அவனுடைய பிறந்த நாட்டை மறந்துவிடச் செய்கின்றது. எங்கள் மரணம் இந்த பூமியை மறந்துவிடச் செய்யாது. ஏனெனில், அது சிவப்பு மனிதர்களின் தாயாக இருக்கின்றது. நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம். இந்த பூமி எங்களில் ஒரு அங்கம். வாசனை மிகுந்த மலர்கள் என் சகோதரிகள். மான்கள், குதிரைகள், கழுகுகள் எங்கள் சகோதரர்கள். உயர்ந்த சிகரங்கள், புல்வெளியின் துளிகள், போனி குதிரையின் உடல் வெப்பம், அனைத்து மனிதர்கள் என்று நாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

எங்கள் நிலப்பகுதியை வாங்குவதற்கு வொஷிங்டனின் பெரிய தலைவர்(ஜனாதிபதி) விருப்பம் தெரிவித்து நமக்கு செய்தி அனுப்பியுள்ளார். நாங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு எங்களுக்காக வேறு இடமொன்றை ஒதுக்கி தருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். அவர் எங்கள் தந்தை. நாங்கள் அவரது குழந்தைகள். எனவே, எங்கள் நிலத்தை வாங்குவதற்கான உங்களுடைய யோசனை குறித்து நாங்கள் சிந்திக்கின்றோம். ஆனால் அது இலகுவானது அல்ல. இந்த நிலம் எங்களுக்காக பூஜிக்கப்பட்டது.

ஓடைகளிலும், ஆற்றிலும் ஒடும் பிரகாசமான நீர், சாதாரணமான நீர் அல்ல. அது எங்கள் மூதாதையர்களின் இரத்தம். எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், அது பூஜிக்கப்பட்டது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அது பூஜிக்கப்பட்டது, ஏரியின் தெளிவான நீரின் ஒவ்வொரு கோரமான பிரதிபலிப்பும் என் மக்களின் வாழ்க்கை நினைவுகளையும், நிகழ்வுகளையும் கூறுகின்றது என்பதனையும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கூற வேண்டும். நீரின் சலசலப்பில் வெளிப்படும் சத்தம் என் தந்தையினது, தந்தையின் குரல்.

ஆறுகள் எங்கள் சகோதரர்கள். அவை எங்கள் தாகத்தை ஆற்றுகின்றன. எங்கள் படகுகளை சுமந்து சென்று, எங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டமளிக்கிறது. எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், ஆறுகள் எங்களதும், உங்களுடையதும் சகோதரர்கள், உங்கள் சொந்த சகோதரர்கள் மீது பாசத்தை பொழிவது போல், ஆற்றையும் பராமரிக்க வேண்டும் என்பதனை நினைவில் கொள்வதுடன், உங்கள் பிள்ளைகளுக்கும் கற்பிக்க வேண்டும்.

வெள்ளை மனிதர்கள் எங்கள் முறைகளை புரிந்துகொள்ளமாட்டார்கள் என எங்களுக்கு தெரியும். நிலத்தின் ஒருபகுதி, அடுத்த பகுதியைப் போன்ற ஒன்று மாத்திரமே அவர்களுக்கு, இரவில் வந்து தமக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு செல்லும் விருந்தினர்கள் அவர்கள். பூமி அவர்களது சகோதரர் இல்லை. ஆனால் அவர்களது பகைவன். அதை அறிந்தவுடன் அவர்கள் வேறிடம் செல்கின்றார்கள். அவர்கள் தமது தந்தையின் கல்லறைகளையும், பிள்ளைகளின் பிறப்புரிமைகளையும் மறந்து செல்கின்றார்கள். அவர்கள், தமது தாய், பூமி, சகோதரர், வானம் என்பவற்றை கொள்வனவு செய்யக் கூடிய, சூறையாடக் கூடிய, ஆடுகள் அல்லது பிரகாசமான முத்துக்களை போல விற்கக்கூடிய பொருட்களாக கருதுகின்றனர். அவர்களுடைய பசி இந்த பூமியை வேகமாக அழித்து வெறும் பாலைநிலத்தை மாத்திரமே எஞ்சச் செய்யும்.

எனக்குத் தெரியவில்லை. எங்கள் முறைகள், உங்கள் முறைகளைவிட வித்தியாசமானது. உங்களுடைய நகரங்களின் பார்வை எங்கள் சிவப்பு மனிதர்களின் கண்களுக்கு வேதனையைத் தருகின்றது. அதற்கு காரணம் சிவப்பு மனிதர்கள் காட்டுமிராண்டிகள் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.

வெள்ளை மனிதர்களின் நகரங்களில் அமைதியான இடமே கிடையாது. வசந்த காலத்தில் இலைகள் அசைந்தாடும் ஒலியையும், பூச்சிகள் சேர்ந்து எழுப்பும் ஒலியையும் செவிமடுப்பதற்கு இடமொன்றும் இல்லை. நான் காட்டுமிராண்டியாய் இருப்பதனால் என்னால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். உரத்த சத்தம் காதுகளுக்கு தீங்கு விளைவிக்கலாம். குருவியின் தனித்த அழும் ஒலி அல்லது இரவில் குளங்களின் அருகில் தவளைகள் கலந்துரையாடும் ஒலியை கேட்காத மனிதன் வாழ்ந்து என்ன பயன்? நான் சிவப்பு மனிதன். என்னால் இதனை புரிந்துகொள்ள முடியவில்லை. குளத்தின் மீதாய் வீசும் காற்றின் மெல்லிய ஒலி, அதன் சுகந்தம், மழையினால் கழுவப்பட்ட அல்லது பைன் மரங்களினால் ஏற்பட்ட சுகந்தம் என்பவற்றையே இந்தியர்கள் விரும்புகின்றனர்.

சிவப்பு மனிதர்களுக்கு காற்றே விலைமதிப்பற்றது. அனைத்தும் சுவாசிக்கின்றன. விலங்குகள், மரங்கள், மனிதர்கள் என அனைவரும் சுவாசித்தை பகிர்கின்றனர். வெள்ளை மனிதர்களும் அதே சுவாசத்தையே பகிர்கின்றனர். வெள்ளை மனிதர்கள் தாம் சுவாசிக்கும் காற்று குறித்து கவனிப்பதில்லை. பல காலங்களாக மனிதன் இறப்பது போல், துர்நாற்றங்களுக்கு உணர்வற்றவனாக இருக்கின்றான். எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், காற்று நமக்கு விலைமதிக்க முடியாதது, எங்கள் பாட்டானார் முதலில் சுவாசித்ததும், இறுதி சுவாசத்தை விட்டதும் இந்த காற்றில்தான் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், அதனை பூஜிக்கத்தக்கதாகவும், வெள்ளை மனிதர்கள் சென்று புல்வெளிகளின் மலர்களால் சுவையேற்றப்பட்ட காற்றை சுவைக்கும் இடமாகவும், வைத்திருக்க வேண்டும்.

எனவே, நீங்கள் நிலத்தை வாங்குவது தொடர்பில் அனுப்பியுள்ள திட்டம் குறித்து நாங்கள் சிந்திக்கின்றோம். அதனை ஏற்றுக் கொள்ள தீர்மானித்தால், நான் ஒரு நிபந்தனையிடுவேன். இந்த நிலத்தின் மிருகங்களை வெள்ளை மனிதர்கள் தமது சகோதரர்களாக நடத்த வேண்டும்.

நான் ஒரு காட்டுமிராண்டி. எனக்கு வேறெந்த முறையும் புரியவில்லை. வெள்ளையர்களினால் கைவிடப்பட்டு புகைவண்டியில், மோதி அழிந்து, அழுகிப்போன ஆயிரக்கணக்கான காளைகளை நான் புல்வெளிகளில் கண்டுள்ளேன். நாங்கள் வாழ்வதற்காக மாத்திரம் கொலை செய்யும் காளைகளை விட, புகைவிடும் இயந்திர குதிரை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஒரு காட்டுமிராண்டி.

மிருகங்கள்இல்லாத பூமியில் மனிதன் எதற்கு? மிருகங்கள் எல்லாம் அழிந்துவிட்டால், மனிதன் ஆன்மாவின் தனிமையில் இறந்து போவான். மிருகங்களுக்கு என்னவெல்லாம் நடக்கின்றதோ, அது விரைவில் மனிதனுக்கும் நடக்கும். எல்லாமே பின்னிப்பிணைந்தவை.

உங்கள் குழந்தைகளின் காலடியில் உள்ள நிலம், எங்கள் பாட்டானார்களின் சாம்பல் என உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கற்பிக்க வேண்டும். எனவே, அவர்கள் இந்த நிலத்தை மதிப்பார்கள். எங்களைப் போன்ற வாழுயிர்களினால் பூமி செல்வச்செழிப்புடன் இருப்பதாக உங்கள் பிள்ளைக்கு கூறுங்கள். இந்த பூமி எங்கள் தாய் என எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் கற்பித்ததை, உங்கள் பிள்ளைகளுக்கும் கற்பியுங்கள். வாழ்க்கை எனும் வலையை பின்னுபவன் மனிதனல்ல. அதில் ஓரிழை மாத்திரமே அவன். அந்த வலைக்கு அவன் என்ன செய்தாலும், அது அவனுக்கே செய்தமைக்கு ஒப்பாகும்.

வெள்ளை மனிதர்களின் கடவுள், அவர்களுடன் நடந்து, நண்பருக்கு நண்பராக இருந்தாலும், அவர்கள் பொதுவான விதியிலிருந்து விலகமுடியாது. நாங்கள் அனைவரும் சகோதரர்களாக இருக்கலாம். பார்க்கலாம். ஒரு விடயம் எமக்குத் தெரியும். ஒருநாள் வெள்ளை மனிதன், எங்கள் கடவுளும், அவர்களது கடவுளும் ஒன்றென்பதை கண்டறிவான். தற்போது எங்கள் நிலத்தை சொந்தமாக்கிக் கொள்வதற்கு விரும்புவது போல, அவரையும் உங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்வதற்கு நீங்கள் சிந்திக்கலாம். ஆனால் உங்களால் முடியாது. அவர் மனிதர்களின் கடவுள். சிவப்பு மனிதன், வெள்ளை மனிதன் அனைவருமே அவரைப் பொறுத்தவரையில் சமமானவர்கள். அவருக்கு இந்த பூமி விலைமதிப்பற்றது. இந்த பூமிக்கு ஊறுவிளைவிப்பதற்கு எடுக்கும் முயற்சிகள், அதன் ஆக்குநர் மீது எடுக்கும் நடவடிக்கைக்கு ஒப்பானதாகும். பழங்குடியினர்களை தொடர்ந்து வெள்ளையர்களும் இல்லாது போகலாம். உங்கள் மெத்தையை மாசுபடுத்தினால், அந்த இரவு உங்கள் கழிவுகளிலேயே நீங்கள் காலஞ்செலுத்த நேரிடும்.

ஆனால், உங்களை இந்த பூமிக்கு கொண்டு வந்து, விசேட காரணங்களுக்காக இந்த நிலத்தின் மீதும், சிவப்பு மனிதர்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு உங்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ள கடவுளின் பலத்துடன், நீங்கள் மேற்கொள்ளும் அழிவு நடவடிக்கையால், நீங்கள் மேலும் பிராகசமாக ஜொலிப்பீர்கள். இந்த விதி எங்களுக்கு மர்மம். காளைகள் எல்லாம் எப்போது படுகொலை செய்யப்பட்டது, காட்டு குதிரைகள் எப்போது அடக்கப்பட்டது, காடுகளின் இரகசிய மூலைகள் எப்போது பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களின் வாசத்தால் நிறைந்தது, மலை முகடுகளின் பார்வை சம்பாஷிக்கும் வயர்களால் எப்போது தொடுக்கப்பட்டது என்பவற்றை எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. எங்கே காடுகள்? அழிந்துவிட்டன. எங்கே கழுகு? அழிந்துவிட்டது."






Comments

  1. //அவர்களுடைய பசி இந்த பூமியை வேகமாக அழித்து வெறும் பாலைநிலத்தை மாத்திரமே எஞ்சச் செய்யும்//
    Very true....

    ReplyDelete
  2. Noops Dear, The content is correct. But this is not a speech. This is a letter is wrote by the Chief Seathl who is the chief of the Read indian's. They lived the islands of the Puget Sound those days and Washington DC wants that lands and ask the Red Indians to move away no to SURRENDER. This was around 1854 and wrote it to the letter. Thats also not surrendering function. Please change the word of surrendering. Don't use the word. Because thats insulting the great warriors. In that he mention those buffaloes shoots from the rain not by the train. In our schools days this also a subject in English Literature. I took. this also to the final O/L Exam in those days. I am very happy to see it again. Because its took me to the past. mmmm Thanks buddy. Keep posting. Please consider on wordings.

    ReplyDelete
  3. //அவர்களுடைய பசி இந்த பூமியை வேகமாக அழித்து வெறும் பாலைநிலத்தை மாத்திரமே எஞ்சச் செய்யும்//
    Very true....
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!.....

    ReplyDelete
  4. //Noops Dear, The content is correct. But this is not a speech. This is a letter is wrote by the Chief Seathl ,,,,,,,,,,,,,,,,,,,//
    Thanks for your comments,,,there was a little confusion between the speech and letter.... http://www.archives.gov/publications/prologue/1985/spring/chief-seattle.html u can c the speech in this link....any thankin u again for the valuable comment...i made correction too....

    ReplyDelete
  5. nic wrk...by the way, wat happened to ur fb account?.... pls join back... thank u :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….