Skip to main content

ஞாபகங்களை சேமித்தல்

சுழன்று அடிக்கும் ஞாபகங்களை
பொறுக்கியெடுத்துக் கொண்டேஓடிக் கொண்டிருக்கின்றேன். கடற்கரை மணலில் புதைந்து விளைந்த
வரிசையாக தொடரும் பாதச் சுவடுகள்
கலைத்த அலைகளின் வேகத்தில் பாதந் தொட்டு
உச்சி சிலிர்த்த விநாடிகள்….
அப்படியே உணர்வுகளை பேசவிட்டு
வெட்கங்களை விலக்கி ஒன்றாக்கி
உயிர் கலந்த கணம்…
ஒன்றையும் மறக்காது
முடிச்சுக்களை கடந்து செல்லும்
ஞாபகங்களை
பொறுக்கியெடுத்துக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றேன்.
முதல் பார்வையிலேயே
உயிர் வேர்க்க
சிலிர்த்தெழுந்த மயிர்க்கால்களின் ஆவேசம்…..
உன் விரல்பட்ட பொழுதன்றில்
புயல் கடந்த மனமகிழ்வு…
உன் இமை மடிந்த மாத்திரையில்
உடல் பருகிய களவு..
ஓரிரவில் எனை சிறைவைத்த
விரல் கம்பிகளின் நுனி கீறிய வடுக்கள்….
எதையும் தொலைக்காது பத்திரமாய்
ஞாபகங்களை
பொறுக்கியெடுத்துக் கொண்டே ஒடிக் கொண்டிருக்கின்றேன்.பிறந்தநாளொன்றின் முதல் வாழ்த்தில்
இதழ்களை பேசிக் கொள்ளச் செய்த
பரிசுணவை…
திகட்டாமல் புசித்துக் கொண்ட….
மழைகாலத்து நிலவின் நிழலில்
சராசரி குறைந்த உடல்வெப்பம்
இணையாக்க
உடல் போர்வை போர்த்திவிட்டு என்
உடல் வெப்பம் காத்த…. அத்தனையையும் சிதறாது சேமிப்பதாய்.
ஞாபகங்களை
பொறுக்கியெடுத்துக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றேன்…

தொடர்ந்து எனது பதிவுகளில் கவிதைகளையே எழுதிவருவதாக நண்பர்கள் சிலர் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். காரணம், கவிதைகளில் காணப்படும் ஒருதலை உணர்வு. நெருங்கிய நண்பர்கள் சிலர் பயந்துபோய், "மச்சான், ஏதும் பிரச்சினையா? கவலைப்படாத மச்சான்," என்றெல்லாம் ஆறுதல் மின்னஞ்சல்களும், குறுந்தகவல்களும் நிறைந்துவிட்டன. இத்தனைக்கும் மேலே வெளிநாட்டில் இருக்கும் ஒரு நண்பன் நீண்ட நாட்களுக்குப் பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்குமான சந்தர்ப்பத்தை இந்த கவிதைகள் ஏற்படுத்திக் கொடுத்தன.
இந்த கவிதைகள் கொஞ்சம் அனுபவத்தையும் கலந்துதான் இருக்கின்றன. "ஞாபகங்களை சேமித்தல்" என்ற இந்த கவிதை 4 மாதங்களுக்கு முன்னர் எழுதியது என்று நினைக்கின்றேன். நூறு சதவீதம் இந்த கவிதை கற்பனை மாத்திரமே (என் நண்பர்கள் கவனிக்க). மீண்டும், அடுத்த பதிவில் சந்திக்கலாம். வாசித்து பிடித்திருந்தால், ஒரு வாக்கு உங்கள் கணக்கில் மறக்காமல்...


Comments

  1. //எதையும் தொலைக்காது பத்திரமாய்
    ஞாபகங்களை
    பொறுக்கியெடுத்துக் கொண்டே ஒடிக் கொண்டிருக்கின்றேன்.//


    very nice lines.

    ReplyDelete
  2. அழைப்பு....

    "அவன் ஒரு அறிவிப்பாளன்" எனும் தலைப்பில் ஒரு கவிதை....

    வாசிக்க இங்கே வாருங்கள்.....

    http://Safrasvfm.blogspot.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….