Skip to main content

நான் மரித்தவன்....

நீண்ட மௌனம்….
திடீரென பீறிட்டு எழும்
அழுகுரல்கள்….
சிறு வயது முதல்
நான் கேட்டுப் பழகிய குரல்கள்….
எழ முயற்சிக்கிறேன்.

அவர்கள் ஏன் அழுகிறார்கள்….
என் கண்கள் பார்வையற்றதாகி….
எல்லாமே இருளாக இருக்கின்றது….

என்னால் அசையமுடியவில்லை
நன்றாகப் பழகிப் போனவர்களின் குரல்கள்
வெகு அருகில்
பின் விலகிப் போகின்றன.
நேரம்…காலம்…..
எதுவுமே தெரியவில்லை….
எல்லாமே இருளாக இருக்கின்றது…

கண்கள் மூடித்தானே இருக்கின்றன….
உறங்க முயற்சிக்கின்றேன்…
முடியவில்லை…..

கைகள், கால்கள், உடல் எதுவுமே
அசைவதாயில்லை…

திடீரென அழுகுரல்களின் ஒலி அதிகரிக்கின்றது
அப்படியே அழுந்தி
மெதுவாக குறைகின்றது….
உடலில் சின்னதாய் அசைவு…..

சிறிது நேரத்திற்கு அமைதி…..
என் உடலின் அசைவு நிற்கின்றது…
மீண்டும் அதே அழுகுரல்கள்…

மிக நெருக்கமாய் கேட்கின்றன….
சிறிது சிறிதாய் குறைகின்றன….
உடல் தகிப்பதை போல்
ஒரு உணர்வு…..

ஒரே புழுக்கமாய் இருக்கின்றது…..
என் உடல் எரிகின்றது…
எல்லாம் இப்போது எனக்கும் புரிகின்றது…
நான் மரித்துவிட்டேன்….

அண்மையில் சிக்மன் புரொய்ட் எழுதிய கட்டுரை ஒன்றினை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. "ஒவ்வொரு மனிதனும் ஆழ்மனதில் மரணத்தை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கின்றான்" என அவர் குறிப்பிடுகின்றார். அனைவருமே மரணத்தை வெறுக்கின்றார்கள்(நான் உட்பட).வாழ்வதிலே அனைவருக்கும் அத்தனை விருப்பு. அதற்காகத்தானே இத்தனை போராட்டமும். ஒரு வித்தியாசமான முயற்சியாக இறந்தவனாக இருந்து இதனை எழுதியிருக்கின்றேன்.

Comments

  1. இறந்த பின் பிறந்த கவிதை அருமை அண்ணா....

    வித்தியாசமான ஒரு கவிதை... வாழ்த்துக்கள் அண்ணா... அப்படியே என் கவிதையையும் கொஞ்சம் வாசித்துத் தான் பாருங்களேன்.....

    ReplyDelete
  2. ஆஹா! அருமை! மாறுபட்ட சிந்தனை, எத்தனை பேருக்கு இது கைவரும் ?!

    ReplyDelete
  3. நன்றி நெல்லை. எஸ். சரவணகுமார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற...

அம்புகளும், சில ஆண்டவர்களும்

எங்கிருந்தோ வந்து விழுந்த அம்பு மரமொன்றில் கீறி காயம் செய்தது அந்த அம்பு முன்பொரு நாளில் அதே மரத்தில் கிளையொடித்து தீட்டப்பட்டதாம் அதுவே, பின்பொரு நாளில் மரத்தில் கீறி காயம் செய்ததாம்! காடுகள் சுற்றி தேடுதல் செய்து, கதைகள் பல சொல்லி தீட்டப்பட்ட, தீட்டப்படாத அம்புகள் சில அடைத்து வைக்கப்பட்டன… காலங்கள் ஓடி ஒழிய இன்றைப் போல் ஒரு பொழுதில், அடைத்த அம்புகள் சிலவற்றின் கூர் முனைகள் ஒடிக்க மரம் வளர்க்கும் ஆண்டவர் விரும்பினராம்! ஒன்றைப் போல் வேறு மரத்தில் விளைந்த இந்த அம்புகள் முனை ஒடிக்கப்படும் செய்தி அறிந்து, அந்த மரத்தின் சக அம்புகளும், கிளைகளும், கொடிகளும், வேரைப் போன்ற விழுதுகளும் வீதியிறங்கி குரல் எழுப்புகின்றனவாம்! எதுவாயினும், நாளைப் போல் ஒரு நாளில் எதுவும் நடக்கலாம்! அம்புகள் கூராக்கப்படுவதும், விற்கள் வளைக்கப்பட்டு ஆண்டவரால் அனுப்பி வைக்கப்படுவதும் பின் மாறி, ஆண்டவர் தலைகளைப் பதம் பார்ப்பதும், எதுவும் நடக்கலாம் ….. (இது அரசியல் கவிதை அல்ல)

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….