Skip to main content

Posts

Showing posts from 2010

நூற்றாண்டுகளை நோக்கி பயணிக்கும் ஒரு புரட்சியின் கதை

ஒக்டோபர் புரட்சியின் (ரஷ்யப் புரட்சி) நினைவாக முற்கூட்டியே எழுதப்பட்டது. “குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதி கடியொன்றில் எழுந்ததது பார்: குடியரசென்று உலகறியக் கூறிவிட்டார் அடிமைக்குத் தளையில்லை.யாருமிப்போது அடிமையில்லை. அறிக! என்றார் இடிபட்ட சுவர்போல கலிவிழுந்தான் கிருதயுகம் எழுகமாதே! -பாரதி (புதிய ரஷ்யா)- முதலாளித்துவத்தின் பிறப்பு, வளர்ச்சி, அதன் பயணங்கள், அதன் வீழ்ச்சி என்று அனைத்தையும் தனது “மூலதனம்” என்ற நூலிலே விபரித்துள்ள கார்ல் மாக்ஸ், முதலாளித்துவத்தின் அழிவில்தான் சோஷலிசம் மலரும் என்று கூறுகின்றார். அந்த முதலாளித்துவத்தின் அழிவில் சோஷலிசம் பிறந்தமைக்கு ஒரு உதாரணம் தான் ரஷ்யாவின் ஒக்டோபர் புரட்சி. எனினும், மீண்டும் முதலாளித்துவம் முன்னெழுந்து கார்ல் மாக்ஸ் கற்பனை செய்துள்ளதை விட அதிக வீரியத்துடன் காணப்படுகின்ற போதிலும், இந்த முதலாளித்துவச் சமூகம் ஒழிந்து சோஷலிச சமூகம் உருவாகுவதற்கான காலம் அண்மித்துள்ளமையை முதலாளித்துவத்தின் பேறுகளால் தோன்றியுள்ள உலக அழிவுகள் எமக்கு உணர்த்துகின்றன. ரஷ்யாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த ஜார் மன்னராட்சிக்கு எதிரான புரட்சிகள் உ

எங்கள் பூமி..... எங்கள் இயற்கை.....

செவ்விந்தியத் தலைவர் சீயட்ல் (Si’ahl ), தம்முடைய பாராம்பரிய நிலம் தொடர்பில் எழுதிய கடிதம் . செவ்விந்தியர்களின் பாரம்பரிய உறைவிடத்தை அமெரிக்க அரசாங்கம் கையகப்படுத்தும் முயற்சியின் போது இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது . இந்த கடிதம் 1855ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இணையத்தில் ஆங்கிலத்தில் கிடைத்த அந்த அரிய கடிதத்தை தமிழில் மொழிபெயர்க்கும் சிறுமுயற்சி இது . திட்டமிட்ட குடியேற்றம் , பலவந்தமான குடியேற்றம் என அன்றாட செய்திகளில் செவிமடுக்கும் சந்தர்ப்பங்களில் இந்த கடிதம் நமக்கும் ஒரு செய்தியை சொல்லத்தான் செய்கின்றது . " உங்களால் வானத்தையும் , நிலத்தின் அனலையும் வாங்கவோ அல்லது விற்கவோ எவ்வாறு முடியும் ? உங்கள் சிந்தனை எமக்கு விசித்திரமாக இருக்கின்றது . நாங்கள் சுத்தமான காற்றையும் , பிரகாசமான நீரையும் கொண்டிராவிட்டால் உங்களால் எவ்வாறு அதனை வாங்க முடியும் ? இந்த பூமியின் ஒவ்வொரு பகுதியும் என் மக்களுக்காக பூஜிக்கப்பட்டது . பிரகாசிக்கும் ஒவ்வொரு பைன் மரங்களும் , கரையின் மணல் துகள்கள் ஒவ்வொன்றும் , கரும்ப

தீண்டாத வசந்தம் - மனதை தீண்டிய நாவல்

வாழ்க்கையின் தீவிரமான வாசகனாக மாறிவிடும் பொழுதுகளில் எங்களுக்குள் கேள்வியை எழுப்பிவிடுகின்ற பல நூல்கள் உறக்கங்களை கொள்ளை கொண்டு மறையாமல் தொடரும் நினைவுகளாய் நிலைகொண்டு விடுகின்றன. ரூத் தனது சிட்டுக்குருவிக்கு சொல்வது போல் ‘ அவள் நினைவு , போராட்டத்திலே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றது ’. தீண்டாத வசந்தத்தை ஒரு முறை வாசித்தவர்கள் கூட நிலாத்திண்ணையில் தொடங்கி ஆந்திரா முழுவதும் சுற்றி வந்து, எல்லண்ணாவில் தொடங்கி ஜெசி வரை எவரையும் மறக்க மாட்டார்கள். முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு என் நண்பர் ஒருவர் எனக்கு இந்த நூலை பரிந்துரைத்தார். இரவலாக வாங்கி அந்த நாவலை இரண்டு நாட்களுக்குள் வாசித்துவிட்டு உடனே எனக்கான பிரதியை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன். அதன் பின்னர் பலருக்கு அந்த நாவலை வாசிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளேன். பல நாட்கள் நாங்கள் இருவரும் அந்த நாவலை பற்றி விவாதித்திருக்கின்றோம். அப்போது, தீண்டாத வசந்தம் நாவல் என்பது ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அவலங்களை சித்திரிக்கும் ஒரு கதை என்பதாக மட்டுமே அறிந்து வைத்திருந்தோம். அந்த காலக்கட்டத்தில் நாங்கள் ஆரம்பித்த பயில்நிலம் என்ற சஞ்சிகையின் வாசகமாக நாங்