Skip to main content

Posts

Showing posts from August, 2010

எங்கள் பூமி..... எங்கள் இயற்கை.....

செவ்விந்தியத் தலைவர் சீயட்ல் (Si’ahl ), தம்முடைய பாராம்பரிய நிலம் தொடர்பில் எழுதிய கடிதம் . செவ்விந்தியர்களின் பாரம்பரிய உறைவிடத்தை அமெரிக்க அரசாங்கம் கையகப்படுத்தும் முயற்சியின் போது இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது . இந்த கடிதம் 1855ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இணையத்தில் ஆங்கிலத்தில் கிடைத்த அந்த அரிய கடிதத்தை தமிழில் மொழிபெயர்க்கும் சிறுமுயற்சி இது . திட்டமிட்ட குடியேற்றம் , பலவந்தமான குடியேற்றம் என அன்றாட செய்திகளில் செவிமடுக்கும் சந்தர்ப்பங்களில் இந்த கடிதம் நமக்கும் ஒரு செய்தியை சொல்லத்தான் செய்கின்றது . " உங்களால் வானத்தையும் , நிலத்தின் அனலையும் வாங்கவோ அல்லது விற்கவோ எவ்வாறு முடியும் ? உங்கள் சிந்தனை எமக்கு விசித்திரமாக இருக்கின்றது . நாங்கள் சுத்தமான காற்றையும் , பிரகாசமான நீரையும் கொண்டிராவிட்டால் உங்களால் எவ்வாறு அதனை வாங்க முடியும் ? இந்த பூமியின் ஒவ்வொரு பகுதியும் என் மக்களுக்காக பூஜிக்கப்பட்டது . பிரகாசிக்கும் ஒவ்வொரு பைன் மரங்களும் , கரையின் மணல் துகள்கள் ஒவ்வொன்றும் , கரும்ப