Skip to main content

Posts

Showing posts from March, 2010

அங்காடித் தெரு – முதலாளிகள் ராஜாக்களாய்….தொழிலாளிகள் அடிமைகளாய்….

இந்தியாவின் , சென்னை நகரில் எப்போதும் சனநெரிசலாக காணப்படும் ரங்கநாதன் தெருவை அங்காடித் தெருவாக மாற்றி இயக்கியிருக்கின்றார் வெயில் திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் . இந்தியாவுக்கு ஒரே ஒரு முறை விஜயம் செய்திருந்த போதிலும் , அந்த ரங்கநாதன் தெருவுக்கும் மறக்காமல் போயிருந்தேன் . ஒரு 30 நிமிடங்கள் அந்த தெருவில் நடந்து கொண்டிருந்தால் , ஆயிரக்கணக்கான முகங்களைப் பார்ப்போம் . ஆனால் அடுத்தநாள் அதே தெருவில் பயணித்தாலும் இவர்கள் எவரையும் நினைவில் வைத்திருக்க முடியாது . அவ்வளவு விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பகுதி அது . வசந்தபாலனின் முந்தைய படமான வெயிலும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை போராட்டத்தை கருவாக கொண்டு இயக்கப்பட்டிருந்தது . இந்த திரைப்படமும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை நிலையை சித்திரிக்கும் படமாக இருக்கின்றது . எனினும் , யதார்த்தமான ஒரு விடயம் கதைப்பொருளாக கொள்ளப்பட்டிருக்கின்றது . இது இந்தியாவுக்கு மாத்திரமான கதைக்கருவல்ல என்பதே முக்கியமாகின்றது . இலங்கையிலும் , இவ்வாறு தொழிலுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில