Wednesday, December 2, 2009

நினைவு உருமாற்றம்....


என் காதலில்
உனக்கான இடத்தை
வெறுமைப்படுத்த முடியாது
ஆழ்ந்து கிடக்கிறது
அறிவு....

என்னை மறந்து
உன்னை மாத்திரம்
நினைத்துக் கொண்டிருக்கும்
நினைவு உருமாற்றத்தை
செய்து விட்டு போய்விடுகிறது
காதல்......

உன் மீதான
காதலின் அறிகுறியாய்
உறக்கம் இன்றி
கலைந்த இரவுகளும்,

நட்சத்திரங்களை தேடிக்
கதைத்த தனிமையும்
என்னோடு நீங்காமல்
இருக்கின்றன.

உன்னால் நிராகரிக்கப்பட்ட
காதலின் கனவுகள்
ஆளில்லா வெளியில் விரவி
உறக்கத்தை
திருடிக் கொண்டிருக்கின்றன......

நீ வசிக்கும்
தெருமுனை கடக்கும்
ஒவ்வொரு பொழுதும்
இதயம்
திரும்பிப் பார்க்கின்றது.
நீ நடந்து சென்ற வழியில்
பூத்துக் கிடக்கும் என் காதலை...

10 comments:

Anonymous said...

நீ வசிக்கும்
தெருமுனை கடக்கும்
ஒவ்வொரு பொழுதும்
இதயம்
திரும்பிப் பார்க்கின்றது.
நீ நடந்து சென்ற வழியில்

பூத்துக் கிடக்கும் என் காதலை...

கமலேஷ் said...

ம்ம்... கவிதை
நிறைய விஷயங்கள் பேசுகிறது...

Anonymous said...

உன்னால் நிராகரிக்கப்பட்ட
காதலின் கனவுகள்
ஆளில்லா வெளியில் விரவி
உறக்கத்தை
திருடிக் கொண்டிருக்கின்றன......

நீ வசிக்கும்
தெருமுனை கடக்கும்
ஒவ்வொரு பொழுதும்
இதயம்
திரும்பிப் பார்க்கின்றது.
நீ நடந்து சென்ற வழியில்

பூத்துக் கிடக்கும் என் காதலை...



அற்புதமான வரிகள்......

உங்கள் வெற்றிக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்....

பூத்துக் கிடக்கும் என் காதலையா???????

or

பூத்து உதிர்ந்து போய் கிடக்கும் என் காதலையா???????

என் நடை பாதையில்(ராம்) said...

அருமை...

செ.பொ. கோபிநாத் said...

வருகைக்கும் கருத்துக்கும் அனைவருக்கும் நன்றிகள்...

தர்ஷன் said...

அருமையான வரிகள்
மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி

Anonymous said...

super

இலங்கைத் தமிழ்ப் பதிவர் said...

அன்பின் பதிவர்,

இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு சம்மந்தமாக இங்கே சென்று விபரங்களை அறிந்து உங்கள் வருகையை உறுதிப்படுத்த அங்கே பின்னூட்டமொன்றை இட்டுவிடுங்கள். நீங்கள் வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பதிவராயின் நேரடி ஒளிபரப்புப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.

அன்புடன்,

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - அமைப்புக் குழு

திவ்யாஹரி said...

என்னை மறந்து
உன்னை மாத்திரம்
நினைத்துக் கொண்டிருக்கும்
நினைவு உருமாற்றத்தை
செய்து விட்டு போய்விடுகிறது
காதல்......

இந்த காதலே இப்படி தான் நண்பரே.. சரியாக சொன்னீர்கள்..

செ.பொ. கோபிநாத் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திவ்யா.....

Post a Comment

Related Posts with Thumbnails