Thursday, December 24, 2009

உன்னை மாத்திரம்

வார்த்தைகளை கோர்த்துக் கொடுத்துவிட்டு
ஒரு மூலையில் போய் அமர்ந்து விடுகின்றது
இந்த பாழாய்ப் போன புத்தி,
சில அழகிய தவறுகளையும்………
இன்பமான வேதனைகளையும்……..
புரிந்து கொண்டே…
என்னை தடுத்து நிறுத்தாமால்
வழி நடத்திக் கொண்டிருக்கின்றது
என் புத்தி……
அலுவலகப் பணியில்
அப்படியே மூழ்கி கிடைக்கும்
ஒரு விநாடி ஒய்வில்
சோம்பல் முறிக்க,
தொற்றிப் பிடித்து
ஏறி உட்கார்ந்து கொள்கிறாய்
நினைவலைகளில்….
எப்படி உனக்கும் மட்டும் சாத்தியமாகிறது…
இந்த நினைவுக் கொள்ளை…..

எதையும் யோசிக்காது
கடந்து போய்க் கொண்டிருக்கும் காலத்தினை நிறுத்தி
கழுத்தில் பிடித்து,
அப்படியே இடமிருந்து வலமாக சுற்றி
ஒரு சில ஆண்டுகள் பின்னே போய் பார்க்க வேண்டும்….
மீண்டும் ஒருமுறை
உன்மீதான காதலை நான் வெளிப்படுத்திய அந்தப் பொழுதை….

கைகள் வியர்க்க,
இதயத்துடிப்பு அதிகரிக்க,
சொற்கள் தடுமாற,
அந்த ஒரு வார்த்தையை சொல்ல
குறைந்தது முன்னூறு விநாடிகள்.
எப்படியும் சொல்லிவிடுவெதன்ற நினைவில் சொல்லிவிட்டு….
பூமி பார்த்து கொஞ்ச நேரம் நாணம்…..
அட, அந்த கணமே உன் முகம் பார்த்து
உன் பதிலை புரிந்து கொண்டிருந்தால்……..இல்லை…
இன்னும் வேகமாக இடமிருந்து வலம் சுற்றி…..
பின்னே சென்று…..
உன்னைப் பார்த்த அந்த நாள்……
கடும் வெயில் கனலும் அந்திப் பொழுதில்….
சில்லென்ற காற்றின் சிலிர்ப்பில்
இதயம் இருந்த இடத்தை நினைவுப்படுத்திய
உன்னைப் பார்த்து தொலைந்து போன கணங்கள்…..

எப்படி என்னால் மாத்திரம் முடிகின்றது
உன்னை மாத்திரம் நினைத்துக் கொண்டிருக்க…..

8 comments:

தர்ஷன் said...

//எப்படி உனக்கும் மட்டும் சாத்தியமாகிறது…
இந்த நினைவுக் கொள்ளை…..//

அருமையாக இருக்கிறது

சப்ராஸ் அபூ பக்கர் said...

கடந்த கால நினைவுகள் அழகான கவி வரிகளில் செதுக்கப் பட்டிருக்கிறது.

வாழ்த்துக்கள் அண்ணா.....

எட்வின் said...

வரிக்கு வரி உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். வாழ்த்துக்கள். எனது கிறுக்கலையும் படித்து வருவதற்கு நன்றி.

Anonymous said...

nee nenaikirai,unnal mattum thaan mudikirathu enru !! unmai thaan! unnai pol oruththan intha ulagaththil mendum piranthu thaan vara vendum.... i'm sorry,i don't know how to use tamil font here...

Anonymous said...

aluvalakaha panikaluku idaiyilum aval nenaivukal unnai thotti pidiththa pothum avalukaha oru piranththa naal valththu attai varaiya unnal mudiya villaiye?

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

காதலை இவ்வளவு அழகாக சொல்ல, காதலில் திளைத்தவனால் மட்டும் தான் முடியும்! காதலை இதைவிட எப்படி சொல்ல? அருமை!!!!

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

உங்களின் மற்ற படைப்புகளையும் படிக்க ஆசை ஊட்டுகிறது இக் கவி! அனைத்தயும் படித்துவிட்டு வருகிறேன். இன்று இரவுக்குள்!!!

செ.பொ. கோபிநாத் said...

நன்றி நெல்லை. எஸ். சரவணகுமார்

Post a Comment

Related Posts with Thumbnails