Skip to main content

நினைவு உருமாற்றம்....


என் காதலில்
உனக்கான இடத்தை
வெறுமைப்படுத்த முடியாது
ஆழ்ந்து கிடக்கிறது
அறிவு....

என்னை மறந்து
உன்னை மாத்திரம்
நினைத்துக் கொண்டிருக்கும்
நினைவு உருமாற்றத்தை
செய்து விட்டு போய்விடுகிறது
காதல்......

உன் மீதான
காதலின் அறிகுறியாய்
உறக்கம் இன்றி
கலைந்த இரவுகளும்,

நட்சத்திரங்களை தேடிக்
கதைத்த தனிமையும்
என்னோடு நீங்காமல்
இருக்கின்றன.

உன்னால் நிராகரிக்கப்பட்ட
காதலின் கனவுகள்
ஆளில்லா வெளியில் விரவி
உறக்கத்தை
திருடிக் கொண்டிருக்கின்றன......

நீ வசிக்கும்
தெருமுனை கடக்கும்
ஒவ்வொரு பொழுதும்
இதயம்
திரும்பிப் பார்க்கின்றது.
நீ நடந்து சென்ற வழியில்
பூத்துக் கிடக்கும் என் காதலை...

Comments

  1. நீ வசிக்கும்
    தெருமுனை கடக்கும்
    ஒவ்வொரு பொழுதும்
    இதயம்
    திரும்பிப் பார்க்கின்றது.
    நீ நடந்து சென்ற வழியில்

    பூத்துக் கிடக்கும் என் காதலை...

    ReplyDelete
  2. ம்ம்... கவிதை
    நிறைய விஷயங்கள் பேசுகிறது...

    ReplyDelete
  3. உன்னால் நிராகரிக்கப்பட்ட
    காதலின் கனவுகள்
    ஆளில்லா வெளியில் விரவி
    உறக்கத்தை
    திருடிக் கொண்டிருக்கின்றன......

    நீ வசிக்கும்
    தெருமுனை கடக்கும்
    ஒவ்வொரு பொழுதும்
    இதயம்
    திரும்பிப் பார்க்கின்றது.
    நீ நடந்து சென்ற வழியில்

    பூத்துக் கிடக்கும் என் காதலை...



    அற்புதமான வரிகள்......

    உங்கள் வெற்றிக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்....

    பூத்துக் கிடக்கும் என் காதலையா???????

    or

    பூத்து உதிர்ந்து போய் கிடக்கும் என் காதலையா???????

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் அனைவருக்கும் நன்றிகள்...

    ReplyDelete
  5. அருமையான வரிகள்
    மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி

    ReplyDelete
  6. என்னை மறந்து
    உன்னை மாத்திரம்
    நினைத்துக் கொண்டிருக்கும்
    நினைவு உருமாற்றத்தை
    செய்து விட்டு போய்விடுகிறது
    காதல்......

    இந்த காதலே இப்படி தான் நண்பரே.. சரியாக சொன்னீர்கள்..

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திவ்யா.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….