Skip to main content

உன்னை மாத்திரம்

வார்த்தைகளை கோர்த்துக் கொடுத்துவிட்டு
ஒரு மூலையில் போய் அமர்ந்து விடுகின்றது
இந்த பாழாய்ப் போன புத்தி,
சில அழகிய தவறுகளையும்………
இன்பமான வேதனைகளையும்……..
புரிந்து கொண்டே…
என்னை தடுத்து நிறுத்தாமால்
வழி நடத்திக் கொண்டிருக்கின்றது
என் புத்தி……
அலுவலகப் பணியில்
அப்படியே மூழ்கி கிடைக்கும்
ஒரு விநாடி ஒய்வில்
சோம்பல் முறிக்க,
தொற்றிப் பிடித்து
ஏறி உட்கார்ந்து கொள்கிறாய்
நினைவலைகளில்….
எப்படி உனக்கும் மட்டும் சாத்தியமாகிறது…
இந்த நினைவுக் கொள்ளை…..

எதையும் யோசிக்காது
கடந்து போய்க் கொண்டிருக்கும் காலத்தினை நிறுத்தி
கழுத்தில் பிடித்து,
அப்படியே இடமிருந்து வலமாக சுற்றி
ஒரு சில ஆண்டுகள் பின்னே போய் பார்க்க வேண்டும்….
மீண்டும் ஒருமுறை
உன்மீதான காதலை நான் வெளிப்படுத்திய அந்தப் பொழுதை….

கைகள் வியர்க்க,
இதயத்துடிப்பு அதிகரிக்க,
சொற்கள் தடுமாற,
அந்த ஒரு வார்த்தையை சொல்ல
குறைந்தது முன்னூறு விநாடிகள்.
எப்படியும் சொல்லிவிடுவெதன்ற நினைவில் சொல்லிவிட்டு….
பூமி பார்த்து கொஞ்ச நேரம் நாணம்…..
அட, அந்த கணமே உன் முகம் பார்த்து
உன் பதிலை புரிந்து கொண்டிருந்தால்……..இல்லை…
இன்னும் வேகமாக இடமிருந்து வலம் சுற்றி…..
பின்னே சென்று…..
உன்னைப் பார்த்த அந்த நாள்……
கடும் வெயில் கனலும் அந்திப் பொழுதில்….
சில்லென்ற காற்றின் சிலிர்ப்பில்
இதயம் இருந்த இடத்தை நினைவுப்படுத்திய
உன்னைப் பார்த்து தொலைந்து போன கணங்கள்…..

எப்படி என்னால் மாத்திரம் முடிகின்றது
உன்னை மாத்திரம் நினைத்துக் கொண்டிருக்க…..

Comments

  1. //எப்படி உனக்கும் மட்டும் சாத்தியமாகிறது…
    இந்த நினைவுக் கொள்ளை…..//

    அருமையாக இருக்கிறது

    ReplyDelete
  2. கடந்த கால நினைவுகள் அழகான கவி வரிகளில் செதுக்கப் பட்டிருக்கிறது.

    வாழ்த்துக்கள் அண்ணா.....

    ReplyDelete
  3. வரிக்கு வரி உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். வாழ்த்துக்கள். எனது கிறுக்கலையும் படித்து வருவதற்கு நன்றி.

    ReplyDelete
  4. nee nenaikirai,unnal mattum thaan mudikirathu enru !! unmai thaan! unnai pol oruththan intha ulagaththil mendum piranthu thaan vara vendum.... i'm sorry,i don't know how to use tamil font here...

    ReplyDelete
  5. aluvalakaha panikaluku idaiyilum aval nenaivukal unnai thotti pidiththa pothum avalukaha oru piranththa naal valththu attai varaiya unnal mudiya villaiye?

    ReplyDelete
  6. காதலை இவ்வளவு அழகாக சொல்ல, காதலில் திளைத்தவனால் மட்டும் தான் முடியும்! காதலை இதைவிட எப்படி சொல்ல? அருமை!!!!

    ReplyDelete
  7. உங்களின் மற்ற படைப்புகளையும் படிக்க ஆசை ஊட்டுகிறது இக் கவி! அனைத்தயும் படித்துவிட்டு வருகிறேன். இன்று இரவுக்குள்!!!

    ReplyDelete
  8. நன்றி நெல்லை. எஸ். சரவணகுமார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….