Thursday, January 28, 2010

மாறா மன ஆட்சி....

பிடிவாதமும்
சுயநலங்களும்
பேயாய் என்னைத்
தொடர

வலுவிழந்த ஒற்றை உயிரோடு
நிழல் தேடி ஓடுகின்றேன்.....

காற்று அடைத்த
கங்குல் நிஷ்டையில்
ஓயாத அசரீரியாய்
அந்த வார்த்தைகள்......

துவண்டு தோள் தளர்ந்து
உயிர் விழ....
பிம்பங்கள் அறுத்தெறிந்து
எண்ணம் முறுக்கி
விடைத்தெழ.....

உருண்டோடும் இறந்தகாலத்தை
தோண்டியெடுத்துக் கொண்டு
மீண்டும் எட்டிப் பார்க்கும்
பிடிவாதமும்
சுயநலங்களும்...........

2 comments:

Balavasakan said...

இரண்டும் இல்லாத மனிதனை காண்பது அரிது நண்பா..!!!!

Anonymous said...

இரண்டுமே வாழ்கைக்கு உதவாதது நண்பா......

Post a Comment

Related Posts with Thumbnails