Skip to main content

இலங்கை புத்தகப் பண்பாட்டுத் திருவிழா 2010-மாபெரும் ஈழத்து நூல்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும் நூல் அறிமுக நிகழ்வும் கலை நிகழ்ச்சிகளும்

மக்களிடையே அருகியுள்ள புத்தக வாசிக்கும் திறனை வளர்க்கவும், ஈழத்து நூல்களினை இளஞ் சமுதாயத்தினர் மத்தியில் அறிமுகப்படுத்தவும் தேசிய கலை இலக்கியப் பேரவையின், கொழும்பு பேரவை புத்தகப் பண்பாட்டுத் திருவிழா-2010ஐ ஏற்பாடு செய்துள்ளது. நாளை தொடக்கம் மூன்று நாட்கள் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. காலை ஒன்பது மணி முதல் இரவு 8 மணி வரை ஈழத்து நூல்களின் கண்காட்சியும், விற்பனையும் நடைபெறவுள்ளதோடு, தினந்தோறும் தெரிந்தெடுக்கப்பட்ட ஈழத்து இலக்கியங்கள் நான்கு மாலை நேரத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து நாடகம், கவியரங்கம் போன்ற கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

எதிர்காலம் நோக்கிய ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிநிரலில் நீங்களும் கலந்து கொண்டு, நிகழ்வை பயனுள்ளதாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீகள்.

அனைவரும் வருக! புத்தகப் பண்பாட்டை வளர்ப்போம்!

மாபெரும் ஈழத்து நூல்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும்
நூல் அறிமுக நிகழ்வும் கலை நிகழ்ச்சிகளும்

இடம் - தேசிய கலை இலக்கியப் பேரவை,
571/15 காலி வீதி, வெள்ளவத்தை.
(றொக்சி திரையரங்கிற்கு முன்)

காலம் 18,19,20–06–2010
(வெள்ளி,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில்)


நிகழ்ச்சி நிரல்

18.06.2010 (வெள்ளிக்கிழமை)

மு.. 9.00 ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பம்
பி. 6.00 நூல்களின் அறிமுகமும் கலை நிகழ்வும்

தலைமைசைறா கலீல்

நூல்களின் அறிமுகம்
கல்லெறி தூரம்" – கவிதைத் தொகுப்பு : மௌ. மதுவர்மன்
தொடரும் உறவுகள்" - மொழி பெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிவ மிர்துளகுமாரி
யாழ்பாணத்து நீர்வளம்" – ஆய்வு நூல் சி..செந்திவேல்
மனைவி மகாத்மியம்" – சிறுகதைத் தொகுப்பு : திக்வெல்லைக் கமால்

கலை நிகழ்வுகள்
"""""""""""""""""""""

19.06.2010 (சனிக்கிழமை)

மு..9.00 - ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பம்
பி.. 5.00 நூல்களின் அறிமுகமும் கலை நிகழ்வும்

தலைமைதர்சிகா தியாகராஸா

நூல்களின் அறிமுகம்
நீண்ட பயணம்" – நாவல் : மு மயூரன்
பெண்விடுதலைவும் சமூகவிடுதலையும்" – ஆய்வு : எல்.தாட்சாயினி
முறுகல் சொற்பதம்" – கவிதைத் தொகுப்பு : .இரகுபன்
ஆர்கொலோ சதுரர்" – நாட்டிய நாடகம் : சோ. தேவராஜா

கலை நிகழ்வுகள்
"""""""""""""""""""""

20.06.2010 (ஞாயிற்றுக்கிழமை)

மு.. 9.00 : ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பம்
பி.. 5.00 : நூல்களின் அறிமுகமும் கலை நிகழ்வும்

தலைமை தனுஜன்

நூல்களின் அறிமுகம்
ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும்“ – கவிதைத் தொகுப்பு : வி. விமலாதித்தன்
வேப்ப மரம்" – சிறுகதைத் தொகுப்பு : A.R.V.லோஷன்
நாமிருக்கும் நாடே" – சிறுகதைத் தொகுப்புமெ.சி.மோகனராஜன்
செங்கதிர்",“நீங்களும் எழுதலாம்" – சஞ்சிகைகள் : சி.சிவசேகரம்
கலை நிகழ்வுகள்
"""""""""""""""""""""

குறிப்பு : நண்பர்களே! இந்த விபரங்களை இயன்றளவு உங்கள் பதிவுகளிலும், சமூக வலைப்பின்னல்களிலும் பகிர்ந்து, இந்த நிகழ்வு சிறப்புற ஆதரவு தாருங்கள்!

Comments

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற