Skip to main content

405

மலை தொடும் முகிலையும்,
வெயில் விரித்த நிழல் போர்வையின்
மனம் தொடும் அழகையும்
பார்த்து, ரசித்து
உயிர் விறைக்க ஒரு உரைபொழுதும் கடவாது,

பனி
நிறைத்த பச்சைநிற
பசிபோக்கும் தாவரங்களின்
தலையொடித்து உயிர் வாழ,
405க்காய்
உழைப்பு சேர்க்கும்,
சிறகுகளற்ற
மலைக்குருவி நான்...
என் கூட்டுக்குள்ளே இரையிருக்கும்
ஒரு நாளின் இரு பொழுதில்,
சில நேரம் ஒரு பொழுதில்,
சில நேரம் வெறும் வயிறாய்,

ஆறிய கஞ்சிக்கும் வழியில்லை இங்கே,
ஏதோ தேயிலை தரும் சாயத்தை
உயிர் கடத்த உழுகின்றோம்…

உலகெல்லாம்
பல பேராய் பொழுதிறங்கி
பேச்சளக்க கொஞ்சம்,
களைப்பிறக்க
நாம் பறிந்த கொழுந்துகள்
உங்கள் கைகளில் தேயிலை தூள்களாக,
பல சுவையேற்றப்பட்டு,

இன்னும் நாங்கள்
சீனியற்ற வெறுஞ்சாயத்தை
சீவியமாய் வைத்திருப்பது கண்டவர் உண்டோ?

என்
அப்பன்,
அவன் அப்பன்,
அவனுக்கும் அப்பன்,
இன்னும்….

என் பிள்ளை,
அவன் பிள்ளை,
அவனுக்கும் பிள்ளை
இன்னும்…..

முடிந்ததும்,
தொடர்வதும்….

அந்த சில சதுர அடி அறையில்,
அடைபட்டு
நா அடக்கப்பட்டு…..
உழைத்து
நிமிர்ந்த, திரண்ட தோள்கள் இங்கே,
எட்டாய் வளைந்து....

ஊதியம் உயர்த்திக் கேட்கும்,
பின் 405இல்
ஏதோ ஒரு கை அடக்கும்…
ஊர்க்காரன் தொழிற்சங்கத்தில்
சந்தா செலுத்தும்….
களவாய் விற்கின்ற
கள் உண்டு களிக்கும்…
பின் மண்ணோடு மண்ணாகி போகும்.

இதுதான் தொடரும்….

கவ்வாத்து கத்தி
கதிரறுக்கும்,
கொழுந்து செடிகளிலே களையறுக்கும்,
மலை செதுக்கும்
என்றறிவார் உலகத்தார்…

உழைப்பு உறிஞ்சு
உயிர்
வாழும்
பணந்தின்னி அட்டைகளை
பிணமாக்கும் நாள் வருமோ!
அன்றில்
பயம் வருமோ!
மலையகத்தின்
மலை தொடும் முகிலையும்,
வெயில் விரித்த நிழல் போர்வையின்
மனம் தொடும் அழகையும்
பார்த்து, ரசித்து
உயிர் நிலைக்க நாள் வருமோ!

பொழுதெழுந்து
கொழுந்தெடுக்க போறேன்…
பொழுதெழுமா நம் வாழ்வில்…
405இல் நானும்….

(இலண்டனில் இருந்து வெளிவரவிருந்த தீபாவளி மலர் ஒன்றிற்காக கடந்த மாதம் எழுதிய கவிதை. பலநாட்கள் கழிந்த நிலையில், இன்று மீண்டும் வாசித்த போது பிடித்திருந்தது. )

Comments

  1. வாழ்த்துக்கள் .....

    மனதை தொட்ட வரிஇகள்...

    இன்னும் நாங்கள்
    சீனியற்ற வெறுஞ்சாயத்தை
    சீவியமாய் வைத்திருப்பது கண்டவர் உண்டோ?

    வாழ்க வளமுடன் !!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல...

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற...

கந்தசாமி – அப்படியும், இப்படியும்…

க ந்தசாமி … சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக விக்ரம் ரசிகர்களையே காத்திருக்க வைத்த திரைப்படம் . கடைசியாக வெளிவந்த விக்ரமின் “ பீமா ” திரைப்படம் பாரிய வெற்றியை சந்தித்திருக்காத நிலையில் , புதிய இயக்குநர்களின் வரவு , சூர்யா போன்றோரின் அர்ப்பணிப்புடனான நடிப்பு போன்ற பல போட்டிகளுக்கு மத்தியில் கந்தசாமி படம் வெளிவந்திருக்கின்றது . படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே பல பிரமாண்டங்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் அதிகரித்திருந்தன . படபூஜைக்கான அழைப்பிதழ் , படப் பாடல் வெளியீட்டின் போது கிராமங்களை தத்து எடுத்தமை என ஆரம்பம் அதிரடியாக இருந்த நிலையில் , படவெளியீடும் 1000 பிரதிகளுடன் பிரமாண்டமாகவே இருந்தது . தர்க்கரீதியாக பல ஓட்டைகள் நிறைந்த 3 மணித்தியாலங்கள் நீளமான படத்தின் கரு மிகவும் பழைய கதை . சங்கரின் படங்களில் பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட விடயம் . மிக அண்மையில் சிவாஜியில் கூட இந்த விடயம் தான் கூறப்பட்டிருந்தது . கருப்பு பணத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் முறை . சற்று மாறுப்பட்ட முறையை சுசிகணேசன் கந்தசாமிய...