
உன்னைப் பேசி பேசியே
மூர்ச்சையற்றுப் போய் கிடக்கின்றன வார்த்தைகள்…
ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி
ஏதோ ஒரு புள்ளியில் முடியும்
அழகிய கோலமாய்,
எதையோ எழுதத் துடிக்கும்
பேனா
தாள் தொடும் போது
மிக நெருக்கமாய் உன் முகம்….
மைத்துளி முடியும் போது
முழுதுமாய் நீ
நிறைந்திருக்கிறாய்…
மழலையாய்…
இமை விரிந்த போது
அம்மாவே உலகம் என்றிருந்தது….
எதனையும் அறியாமல்,
நீ வந்து சுமந்து செல்கிறாய்…
என் மணித் துளிகளை….
தொட்டு விடும் தூரத்தில்
நீயிருந்த போதிலும்……
அனுமதியற்று …காத்திருப்பில்….
இரப்பவனாய் நான்…..
இரங்காமல் நீ…..
நினைவுக்கெட்டிய வரையில்….
நீயில்லாத எதனையும்
என் வார்த்தைகள் பேசவில்லை…..
மூர்ச்சையற்றுப் போன வார்த்தைகளுக்கு
காற்றுக்கு வழி விட்டு…..
பேனா கொடுத்த போது….
மீண்டும்
எழுதத் தொடங்குகின்றது….
மயங்கி கிடந்த என்னை
மலர வைத்தது உன்னை கடந்து சென்ற காற்றல்லவா!
(கவிதை என்ற வடிவில் எதையாவது எழுதியே தீருவது என்று நினைத்து நான் என்றும் எழுதத் தொடங்கியது இல்லை. பல சந்தர்ப்பங்களில் பேருந்தில் செல்லும் போதும், தனியாக நடந்து செல்லும் போதும் நினைவுகளில் அவள் வந்து அமர்ந்து கொள்ள, என்னையும் அறியாமல் வார்த்தைகளை கோர்ப்பது உண்டு. ஆனால், பல சந்தர்ப்பங்களில் அவை மனதில் உதித்து அப்படியே மறைந்து போய்விடும். தாள் எடுத்து பதிந்து விடும் அளவுக்கு வழி கிடைத்ததில்லை. இன்று வழமைக்கு மாறாக போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்த பொழுதில் நீ அனுப்பிய குறுந்தகவல்கள், அளித்த நினைவுகளின் பதிவாய், கையடக்கத் தொலைபேசியின் குறுந்தகவல் அனுப்பும் பகுதியில் கலைந்துவிடாது சேர்த்து வந்த வார்த்தைகள். அதனை தாளில் எழுதி வாசித்துப் பார்த்த போது உணர்வுகளில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியது. உங்களுக்காகவும் அதனை பதிவிடுகின்றேன். பிடித்திருந்தால் ஆளுக்கு ஒரு வாக்களித்து விட்டுப் போகலாம்.)
மூர்ச்சையற்றுப் போய் கிடக்கின்றன வார்த்தைகள்…
ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி
ஏதோ ஒரு புள்ளியில் முடியும்
அழகிய கோலமாய்,
எதையோ எழுதத் துடிக்கும்
பேனா
தாள் தொடும் போது
மிக நெருக்கமாய் உன் முகம்….
மைத்துளி முடியும் போது
முழுதுமாய் நீ
நிறைந்திருக்கிறாய்…
மழலையாய்…
இமை விரிந்த போது
அம்மாவே உலகம் என்றிருந்தது….
எதனையும் அறியாமல்,
நீ வந்து சுமந்து செல்கிறாய்…
என் மணித் துளிகளை….
தொட்டு விடும் தூரத்தில்
நீயிருந்த போதிலும்……
அனுமதியற்று …காத்திருப்பில்….
இரப்பவனாய் நான்…..
இரங்காமல் நீ…..
நினைவுக்கெட்டிய வரையில்….
நீயில்லாத எதனையும்
என் வார்த்தைகள் பேசவில்லை…..
மூர்ச்சையற்றுப் போன வார்த்தைகளுக்கு
காற்றுக்கு வழி விட்டு…..
பேனா கொடுத்த போது….
மீண்டும்
எழுதத் தொடங்குகின்றது….
மயங்கி கிடந்த என்னை
மலர வைத்தது உன்னை கடந்து சென்ற காற்றல்லவா!
(கவிதை என்ற வடிவில் எதையாவது எழுதியே தீருவது என்று நினைத்து நான் என்றும் எழுதத் தொடங்கியது இல்லை. பல சந்தர்ப்பங்களில் பேருந்தில் செல்லும் போதும், தனியாக நடந்து செல்லும் போதும் நினைவுகளில் அவள் வந்து அமர்ந்து கொள்ள, என்னையும் அறியாமல் வார்த்தைகளை கோர்ப்பது உண்டு. ஆனால், பல சந்தர்ப்பங்களில் அவை மனதில் உதித்து அப்படியே மறைந்து போய்விடும். தாள் எடுத்து பதிந்து விடும் அளவுக்கு வழி கிடைத்ததில்லை. இன்று வழமைக்கு மாறாக போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்த பொழுதில் நீ அனுப்பிய குறுந்தகவல்கள், அளித்த நினைவுகளின் பதிவாய், கையடக்கத் தொலைபேசியின் குறுந்தகவல் அனுப்பும் பகுதியில் கலைந்துவிடாது சேர்த்து வந்த வார்த்தைகள். அதனை தாளில் எழுதி வாசித்துப் பார்த்த போது உணர்வுகளில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியது. உங்களுக்காகவும் அதனை பதிவிடுகின்றேன். பிடித்திருந்தால் ஆளுக்கு ஒரு வாக்களித்து விட்டுப் போகலாம்.)
அழகாக இருக்கிறது கவிதை
ReplyDelete//கௌரி பிரியா//
ReplyDeleteஉங்கள் வருகை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்...
//மழலையாய்…
ReplyDeleteஇமை விரிந்த போது
அம்மாவே உலகம் என்றிருந்தது….
எதனையும் அறியாமல்,
நீ வந்து சுமந்து செல்கிறாய்…
என் மணித் துளிகளை….//
மிக அழகான கவிதை இந்த தளத்தை காட்டிய தமிழர்ஸ்க்கு தான் நன்றி சொல்லனும்
உங்கள் வரவுக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி சுரேஸ்....
ReplyDelete//ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி
ReplyDeleteஏதோ ஒரு புள்ளியில் முடியும்
அழகிய கோலமாய்,........
நினைவுக்கெட்டிய வரையில்….
நீயில்லாத எதனையும்
என் வார்த்தைகள் பேசவில்லை…..//
absolutely great words..... you have given words to my thoughts.... as you said... the thoughts roam around your heads.... before you take the pen....
un kavithai padiththathum etho onrai eluthivedavendum enra avalil vaarththaikalukaha poradukirathu en manam,,, piranththa kulanthai than thaaiyai kandathum eththanai aravaram kollumo athumatheri un kavithai enaku... kolzi eeri methiththu kunju saavatheillai...
ReplyDeleteதொட்டு விடும் தூரத்தில்
ReplyDeleteநீயிருந்த போதிலும்……
அனுமதியற்று …காத்திருப்பில்….
இரப்பவனாய் நான்…..
இரங்காமல் நீ…..
Excellent....
உன்னைப் பேசி பேசியே
ReplyDeleteமூர்ச்சையற்றுப் போய் கிடக்கின்றன வார்த்தைகள்...
Hmmmmmmmm
ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி
ReplyDeleteஏதோ ஒரு புள்ளியில் முடியும்
அழகிய கோலமாய்,........
நினைவுக்கெட்டிய வரையில்….
நீயில்லாத எதனையும்
என் வார்த்தைகள் பேசவில்லை….. நன்றாக இருக்கிறது