இன்றைய தினத்துடன் (25-08-2009) வானியலின் தந்தை கலீலியோ கலிலி தொலைநோக்கி என்ற அரிய பொருளை கண்டுபிடித்து 400 வருடங்கள் பூர்த்தியாகின்றன. அதன் நினைவாக, கலீலியோ கலிலியின் தொலைநோக்கி கண்டுபிடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்த வானியல் சாதனைகள் தொடர்பில் ஒரு கட்டுரை எழுதலாம் என்று தோன்றியது. 1609ஆம் ஆண்டில் கலீலியோ என்ற வானியலாளர் தொலைநோக்கி ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்தியதன் 400ஆவது ஆண்டு கொண்டாட்டமாக இந்த ஆண்டு (2009) சர்வதேச வானியல் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த கட்டுரை பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கின்றேன்.

கலீலியோ தான் கண்டறிந்தவற்கை எழுதி வைத்தார். கோபர்நிகஸ் என்ற அவருக்கு முன்னிருந்த வானியலாளர் சூரியன் தான் மையத்தில் உள்ளது. மற்ற அனைத்து கோள்களும் சூரியனைச் சுற்றித்தான் வருகின்றன என்று சொல்லியிருந்தார். கலீலியோ தனது தொலைநோக்கியால் கண்டறிந்தவற்றை வைத்து கோபர்நிகஸின் கூற்று சரியானதே என்று சொன்னார். ஆனால் 17ஆம் நூற்றாண்டில் கிறித்துவ தேவாலயம் இதனை ஏற்க மறுத்தது. கலீலியோவை அச்சுறுத்தி, வீட்டுக் காவலில் வைத்து தான் சொன்னது தவறு என்று அவரையே சொல்ல வைத்தனர்.
வீட்டுக் காவலில், கண் குருடாகி கலீலியோ உயிரைவிட்டார். ஆனால் அவரது தொலைநோக்கியும், அவரது வானியல் ஆராய்ச்சியும் அழியவில்லை. அடுத்த சில வருடங்களில் டைகோ பராஹே, யோஹானஸ் கெப்ளர் போன்றோர் தொலைநோக்கியின் உதவியுடன் ஒவ்வொரு கோளும் எப்படிச் சுற்றுகின்றது என்ற துல்லியமான தகவல்களைத் திரட்டினர். ஆதற்குப்பின் அழியாப் புகழ் கொண்ட ஐஸக் நியூட்டன வானில் உள்ள ஒவ்வொரு பொருளும் எப்படி இயங்குகின்றது என்பதற்கான தன்னுடைய ஈர்ப்புவிசைக் கோட்பாட்டை வெளியிட்டார்.

தொலைநோக்கிகளின் வளர்ச்சியில், 20ஆம் நூற்றாண்டில் ரேடியோ தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொலைநோக்கியின் ஊடாக, வெற்றுக் கண்ணால் நாங்கள் பார்க்கும் ஒளியை குவித்துத் தர முடியும். இதன் காரணமாகவே வெகுதூரத்தில் உள்ள பொருளை தொலைநோக்கியூடாக நாம் பார்க்கும் போது அந்த பொருள் தெளிவாக, பெரிதாகத் தெரிகின்றது. வெற்றுக் கண்ணால் நாங்கள் காணும் ஒளி மின்காந்த அலைகள்(400-700 நனோ மீற்றர்) என்று சொல்லப்படும் அலைகளில் ஒரு சிறு பகுதிதான். மனிதக் கண்ணால் நாங்கள் காண முடியாத பல மின்காந்த அலைகள் உள்ளன. (உதாரணம்: புறஊதாக் கதிர், அகச் சிவப்புக் கதிர், எக்ஸ் கதிர், மைக்ரோ கதிர்கள், காமா கதிர்கள்). ரேடியோ தொலைநோக்கி என்பது வெற்றுக் கண்ணால் காண முடியாத குறித்த மின்காந்த அலைகளை பெற்று அவற்றின் மூலம் பொருளின் வடிவத்தை பார்க்க் கூடியதாகவுள்ளது. ரேடியோ தொலைநோக்கி என்பது கலீலியோ செய்த குழாய் வடிவிலானதாகவோ, பைனாகுலர் போன்ற வடிவிலோ இருக்காது. இது செய்மதி டிஸ் அன்டனாவைப் போன்றது.
ரேடியோ தொலைநோக்கி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர், 1929ஆம் ஆண்டில் எட்வின் ஹப்பள் என்பவர் பிரபஞ்சம் விரிந்துகொண்டே போவதனை (நம்மிடமிருந்து தொலைதூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் நம்மை விட்டு விலகிச் செல்லுதல்) கண்டுபிடித்தார். 1930இல் ரேடியோ தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து எட்வின் ஹப்பளின் கண்டுபிடிப்பு உண்மையென்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவற்றுக்கெல்லாம் முன்னர் ஐன்ஸ்டீன் தனது பொதுச் சார்புகொள்கையிலும் பிரபஞ்சம் விரிவாகிக் கொண்டு போவதனை கண்டறிந்தார். ஆனால் அப்போது அதனை அவறால் ஏற்கமுடியவில்லை. எனவே, தனது கொள்கையின் சமன்பாடுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி ‘பிரபஞ்சம் விரிவாகுதல்’ என்பது உண்மையாகாது பார்த்துக் கொண்டார். எனினும், ரேடியோ தொலைநோக்கி மற்றும் எட்வின் ஹப்பளின் கண்டுபிடிப்புக்களினைத் தொடர்ந்து தனது சமன்பாடுகளை மீண்டும் திருத்தி ‘பிரபஞ்சம் விரிவாகுதலை’ ஏற்றுக் கொண்டார்.
பிரபஞ்ச விரிவாகுதல் என்ற கருத்தின் பயனாக எழுந்த வினாக்களே அண்ட பெருவெடிப்புக் கொள்கைக்கும் ஆதாரமாக அமைந்தன. பிரபஞ்சம் விரிடைகின்றது என்றால், அதற்கு முன்னர் ஒரு கட்டத்தில் மிகநெருக்கமாக, குறுகிய இடத்தில் வான்பொருள்கள் ஒன்றாக இருந்து அழுத்தம் தாங்காது வெடித்துச் சிதறியிருக்கலாம் என்றும், அவ்வாறுதான் நட்சத்திரங்கள், விண்கற்கள், கோள்கள் என்பன உருவாகியிருக்கலாம் என் அண்டபெருவெடிப்புக் கொள்கை தோன்றியது. ஆனால் இதனை எவ்வாறு ஏற்றுக் கொள்வது? ஆதற்கான ஆதாரங்கள் எவை?
இந்த வினாக்களுக்கான விடைகளை கண்டறிவதற்காகவே, இவ்வாறு அழுத்தம் காரணமாக வெடித்து உருவானவை கோள்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் என கருதுவோமானால், அவ்வாறு சிதறி பரவும் போது வெப்ப, மின்காந்த அலைகள் பெரும் அளவில் பரவியிருக்கும். அந்த அலைகள் இப்போதும் எஞ்சியிருக்கலாம். அந்த அலைகளை கண்டறிந்து அளப்பதன் மூலம் இந்த கொள்கையை உண்மையாக்க முடியம் என 1948இல் ஜோர்ஜ் காமா, ரால்ஃப் ஆல்ஃபர், ரொபர்ட் ஹென்மன் ஆகியோர் கருத்து ரீதியாக இதனை முன்வைத்தனர். இதன் தொடர்ச்சியாக 1964ஆம் ஆண்டு ஆர்னோ பென்ஸியாஸ் மற்றும் ரொபர்ட் வில்சன் ஆகியோர் தங்களது ரேடியோ தொலைநோக்கியின் ஊடாக இந்த கொஸ்மிக் பின்னணிக் கதிர்வீச்சைக் கண்டறிந்து, பெருவெடிப்புக் கொள்கை ஊடாகத்தான் இந்த பிரபஞ்சம் தோன்றியிருக்க வேண்டும் என்ற உண்மையைக் கண்டறிந்தனர். இதன் பொருட்டு இவர்கள் இருவருக்கும் 1978 ஆம் ஆண்டு நொபெல் பரிசு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
கலீலியோவின் தொலைநோக்கிக்கு 400வயதுகள் ஆகியுள்ள தற்போது, பல புதிய விடயங்களை நாம் கண்டறிந்துள்ளோம்.
- இந்த பிரபஞ்சத்தில் சூரியக் குடும்பம் பால்வீதி அண்டத்தில் ஒரு சிறு பகுதி. சூரியனைச் சுற்றி 8 கோள்கள் உள்ளன. அதில் ஒரு கோளான பூமியில் நாம் வசிக்கின்றோம்.
- சூரியன்நட்சத்திர வகையைச் சேர்ந்தது. அதன் மையத்தில் அணுச்சேர்க்கையினால் ஐதரசன் மற்றும் ஹீலியம் அணுக்கள் தோன்றுகின்றன. அதன் பயனாக உருவாகும் வெப்பமும், ஒளியுமே பூமிக்கு ஒளியைத் தருகின்றன.
- சூரியனைப் போன்ற அளவில் பெரிய பல இலட்சம், பல கோடி நட்சத்திரங்கள் உள்ளன.
- பூமியைப் போன்ற கோள்களில் அணுச்சேர்க்கைகள் நடைபெறுவதில்லை.
- சூரியனை பூமியும், கோள்களும் சுற்றிவர, சூரியன் பால்வீதி அண்டத்தைச் சுற்றி வருகின்றது.
- பால்வீதி அண்டம் போன்ற பல அண்டங்கள் உள்ளன. ஒவ்வொரு அண்டத்திலும் பல நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள் என்பன காணப்படுகின்றன.நமது பால்வீதி அண்டத்திற்கு அருகில் உள்ள அண்டம் ஆந்திரோமீடா அண்டமாகும்.
- நட்சத்திரங்கள், கோள்கள் மாத்திரமல்லாது வேறு பலப் பொருட்களும் வானில் உள்ளன.
- ஒரு நட்சத்திரம் எரிந்து முடிக்கும் போது, அணுச்சேர்க்கை நடக்காது என்ற நிலையை எட்டும்போது, அந்த நட்சத்திரம் சூப்பர் நோவா என்ற நிலையை அடைந்து அதிபயங்கர வெளிச்சத்துடன் எரிந்து வெண்குள்ளன, கருங்குள்ளன் அல்லது நியூட்ரான் என்ற நிலையை அடையும்.
- பால்வீதி அண்டத்தில் காணப்படும் வேறு கோள்களில் மனிதர்கள் உயிர்வாழ்கிறார்களா அல்லது மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு உகந்ததா என்பது தொடர்பில் தற்போது பரவலான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
- 5மில்லியன் ஆண்டுகளில் சூரியன் பூமியை விழுங்கிவிடும் என்ற கருத்தும் காணப்படுகின்றது. அதுவரை பூமியில் உயிர்கள் இருக்குமா என்பது இதுவரை கண்டறியப்படாத விடயம். ஏவ்வாறாயினும், பூமி தோன்றி சுமார் 3.7 மில்லியன் ஆண்டுகளாவதாகவும், மனிதர்கள் உருவாகி சுமார் 2இலட்சம் ஆண்டுகள் இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு : 1564ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி பிறந்த கலீலியோ கலிலி 1642ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி உயிரிழந்தார்.இத்தாலியாரான இவர் வைத்தியர், கணிதவியலாளர், வானியலாளர் மற்றும் தத்துவியலாளர் என பல் திறமைகள் வாய்ந்தவர்.
உசாத்துணை மற்றும் நன்றிகள்: பிரபஞ்ச ரகசியம் - பத்ரி சேஷாத்ரி (அம்ருதா-ஏப்ரல்), விக்கிபீடியா, கூகுள் தேடல்
very interesting sir....keep going ;)
ReplyDelete//very interesting sir....keep going ;)//
ReplyDeletethx 4 visitin Kamal
வருகைக்கு நன்றி கமல்...
நல்லதொரு அறிவியல் பதிவு...
ReplyDeleteஆரோக்கியமாக உள்ளது.........
வாழ்த்துக்கள்.... தொடரட்டும் உங்கள் பயணம்....
it is very useful post. I use my telescope regularly to see planets and stars. Eventhough my telescope is of type newtonion, still the credit goes to Galileo.
ReplyDelete//it is very useful post. I use my telescope regularly to see planets and stars. Eventhough my telescope is of type newtonion, still the credit goes to Galileo.//
ReplyDeletethq very much பின்னோக்கி
//நெப்டியூன் என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அது கோள் அல்ல என வானியலாளர்களால் அறிவிக்கப்பட்டது.//
ReplyDeleteஅது நெப்டியூன் அல்ல...ப்ளூட்டோ
''//நெப்டியூன் என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அது கோள் அல்ல என வானியலாளர்களால் அறிவிக்கப்பட்டது.//
ReplyDeleteஅது நெப்டியூன் அல்ல...ப்ளூட்டோ''
நன்றி உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும். நீங்கள் சொன்ன விடயத்தை திருத்திவிட்டேன்.