Skip to main content

ஞாபகங்களை சேமித்தல்

சுழன்று அடிக்கும் ஞாபகங்களை
பொறுக்கியெடுத்துக் கொண்டேஓடிக் கொண்டிருக்கின்றேன். கடற்கரை மணலில் புதைந்து விளைந்த
வரிசையாக தொடரும் பாதச் சுவடுகள்
கலைத்த அலைகளின் வேகத்தில் பாதந் தொட்டு
உச்சி சிலிர்த்த விநாடிகள்….
அப்படியே உணர்வுகளை பேசவிட்டு
வெட்கங்களை விலக்கி ஒன்றாக்கி
உயிர் கலந்த கணம்…
ஒன்றையும் மறக்காது
முடிச்சுக்களை கடந்து செல்லும்
ஞாபகங்களை
பொறுக்கியெடுத்துக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றேன்.
முதல் பார்வையிலேயே
உயிர் வேர்க்க
சிலிர்த்தெழுந்த மயிர்க்கால்களின் ஆவேசம்…..
உன் விரல்பட்ட பொழுதன்றில்
புயல் கடந்த மனமகிழ்வு…
உன் இமை மடிந்த மாத்திரையில்
உடல் பருகிய களவு..
ஓரிரவில் எனை சிறைவைத்த
விரல் கம்பிகளின் நுனி கீறிய வடுக்கள்….
எதையும் தொலைக்காது பத்திரமாய்
ஞாபகங்களை
பொறுக்கியெடுத்துக் கொண்டே ஒடிக் கொண்டிருக்கின்றேன்.பிறந்தநாளொன்றின் முதல் வாழ்த்தில்
இதழ்களை பேசிக் கொள்ளச் செய்த
பரிசுணவை…
திகட்டாமல் புசித்துக் கொண்ட….
மழைகாலத்து நிலவின் நிழலில்
சராசரி குறைந்த உடல்வெப்பம்
இணையாக்க
உடல் போர்வை போர்த்திவிட்டு என்
உடல் வெப்பம் காத்த…. அத்தனையையும் சிதறாது சேமிப்பதாய்.
ஞாபகங்களை
பொறுக்கியெடுத்துக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றேன்…

தொடர்ந்து எனது பதிவுகளில் கவிதைகளையே எழுதிவருவதாக நண்பர்கள் சிலர் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். காரணம், கவிதைகளில் காணப்படும் ஒருதலை உணர்வு. நெருங்கிய நண்பர்கள் சிலர் பயந்துபோய், "மச்சான், ஏதும் பிரச்சினையா? கவலைப்படாத மச்சான்," என்றெல்லாம் ஆறுதல் மின்னஞ்சல்களும், குறுந்தகவல்களும் நிறைந்துவிட்டன. இத்தனைக்கும் மேலே வெளிநாட்டில் இருக்கும் ஒரு நண்பன் நீண்ட நாட்களுக்குப் பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்குமான சந்தர்ப்பத்தை இந்த கவிதைகள் ஏற்படுத்திக் கொடுத்தன.
இந்த கவிதைகள் கொஞ்சம் அனுபவத்தையும் கலந்துதான் இருக்கின்றன. "ஞாபகங்களை சேமித்தல்" என்ற இந்த கவிதை 4 மாதங்களுக்கு முன்னர் எழுதியது என்று நினைக்கின்றேன். நூறு சதவீதம் இந்த கவிதை கற்பனை மாத்திரமே (என் நண்பர்கள் கவனிக்க). மீண்டும், அடுத்த பதிவில் சந்திக்கலாம். வாசித்து பிடித்திருந்தால், ஒரு வாக்கு உங்கள் கணக்கில் மறக்காமல்...


Comments

  1. //எதையும் தொலைக்காது பத்திரமாய்
    ஞாபகங்களை
    பொறுக்கியெடுத்துக் கொண்டே ஒடிக் கொண்டிருக்கின்றேன்.//


    very nice lines.

    ReplyDelete
  2. அழைப்பு....

    "அவன் ஒரு அறிவிப்பாளன்" எனும் தலைப்பில் ஒரு கவிதை....

    வாசிக்க இங்கே வாருங்கள்.....

    http://Safrasvfm.blogspot.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற...

அம்புகளும், சில ஆண்டவர்களும்

எங்கிருந்தோ வந்து விழுந்த அம்பு மரமொன்றில் கீறி காயம் செய்தது அந்த அம்பு முன்பொரு நாளில் அதே மரத்தில் கிளையொடித்து தீட்டப்பட்டதாம் அதுவே, பின்பொரு நாளில் மரத்தில் கீறி காயம் செய்ததாம்! காடுகள் சுற்றி தேடுதல் செய்து, கதைகள் பல சொல்லி தீட்டப்பட்ட, தீட்டப்படாத அம்புகள் சில அடைத்து வைக்கப்பட்டன… காலங்கள் ஓடி ஒழிய இன்றைப் போல் ஒரு பொழுதில், அடைத்த அம்புகள் சிலவற்றின் கூர் முனைகள் ஒடிக்க மரம் வளர்க்கும் ஆண்டவர் விரும்பினராம்! ஒன்றைப் போல் வேறு மரத்தில் விளைந்த இந்த அம்புகள் முனை ஒடிக்கப்படும் செய்தி அறிந்து, அந்த மரத்தின் சக அம்புகளும், கிளைகளும், கொடிகளும், வேரைப் போன்ற விழுதுகளும் வீதியிறங்கி குரல் எழுப்புகின்றனவாம்! எதுவாயினும், நாளைப் போல் ஒரு நாளில் எதுவும் நடக்கலாம்! அம்புகள் கூராக்கப்படுவதும், விற்கள் வளைக்கப்பட்டு ஆண்டவரால் அனுப்பி வைக்கப்படுவதும் பின் மாறி, ஆண்டவர் தலைகளைப் பதம் பார்ப்பதும், எதுவும் நடக்கலாம் ….. (இது அரசியல் கவிதை அல்ல)

கந்தசாமி – அப்படியும், இப்படியும்…

க ந்தசாமி … சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக விக்ரம் ரசிகர்களையே காத்திருக்க வைத்த திரைப்படம் . கடைசியாக வெளிவந்த விக்ரமின் “ பீமா ” திரைப்படம் பாரிய வெற்றியை சந்தித்திருக்காத நிலையில் , புதிய இயக்குநர்களின் வரவு , சூர்யா போன்றோரின் அர்ப்பணிப்புடனான நடிப்பு போன்ற பல போட்டிகளுக்கு மத்தியில் கந்தசாமி படம் வெளிவந்திருக்கின்றது . படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே பல பிரமாண்டங்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் அதிகரித்திருந்தன . படபூஜைக்கான அழைப்பிதழ் , படப் பாடல் வெளியீட்டின் போது கிராமங்களை தத்து எடுத்தமை என ஆரம்பம் அதிரடியாக இருந்த நிலையில் , படவெளியீடும் 1000 பிரதிகளுடன் பிரமாண்டமாகவே இருந்தது . தர்க்கரீதியாக பல ஓட்டைகள் நிறைந்த 3 மணித்தியாலங்கள் நீளமான படத்தின் கரு மிகவும் பழைய கதை . சங்கரின் படங்களில் பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட விடயம் . மிக அண்மையில் சிவாஜியில் கூட இந்த விடயம் தான் கூறப்பட்டிருந்தது . கருப்பு பணத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் முறை . சற்று மாறுப்பட்ட முறையை சுசிகணேசன் கந்தசாமிய...