Skip to main content

காதலிச்சு...

ஓன் பேர
பச்ச குத்தி பட்ட காயம்
ஆற முன்ன….
ஓன் கல்யாண பத்திரிக்க
கொண்டு வந்து நீட்டுறியே….

என் கைய புடிச்சிகிட்டு
கடலோரம் நடக்கயில…..
நீ தந்த வாக்கெல்லாம்
காத்தாகி போயிடுச்சே…..

ஒன்னால நா பட்ட காயமெல்லாம் ஆறிரும்…
ஆனா….ஒன் மொகத்த
என் மனசு எப்படி மறக்கும்…..

தலைவார போகயில….
கண்ணாடியில ஒன் மொகந்தானே தெரியுது…

கண்ண மூடி அசரயில
ஏன் புள்ள கனவுல நீ வந்து தொலைச்ச….
என்ன விட்டு இப்போ நீ போயி தொலைஞ்ச….

பாசந்தான் பெரிசுன்னு நீ பிரிஞ்சு போன….
நா வெச்ச பாசத்த நீ
நெனச்சு பாக்கலியே….

நீ பாக்க
ஒன் முன்னாடி
நா ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்னு
நீ சொன்ன கடசி வார்த்த……

அப்ப தானே நா முழுசா செத்துப் போனேன்…
போதும் புள்ள

நீ வெதச்ச நெனப்பெல்லாம்
என மனசோரம்
அழியாம நெறஞ்சிருக்க….

ஒனக்கொண்ணும் ஆகம..
நீ சொகமா இருக்கணும்
ஒன் கைபுடிக்கும் மகராசன்
ஒன் உசிராக இருக்கணும்….

எனக்கொன்னும் கொறவில்ல…
நாயிருப்பேன் கல்லாட்டம்…
நீயில்லாத நா கல்லு தானே….

ஓன் நெனப்போட நா இருப்பேன்.
என் உசிரு என்ன விட்டு போனாத்தான்…
ஒன் நெனப்பும் மறஞ்சி போகும்….

ஒரு வித்தியாசமான முயற்சி. கடந்த பதிவில் நான் மரித்தவன்னு ஒரு கவிதை எழுத முயற்சி செய்திருந்தேன். நிறைய நண்பர்கள் மின்னஞ்சலில் செல்லமாக கோபப்பட்டு கொண்டார்கள். இப்படியெல்லாம் எழுத வேண்டாம் என சில நண்பர்களின் மிரட்டலான வேண்டுகோள் வேறு( உனக்கென்ன வரிக்கு, வரி சொற்களை தனித்தனியாக போட்டால் கவிதை எழுதுறது என்று நினைப்போ... திரு ஃ திட்டியிருந்தார்). ஆனால் நான் மரணம் பற்றி எழுதியதில் தான் நிறைய பேர் கடிந்து கொண்டார்கள். சரி இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக.கிராமத்து நடையில் ஒரு கவிதை முயற்சி ( திரு ஃ நீங்கள் கட்டாயம் இதையும் வாசித்து உங்கள் உண்மையான கருத்தை சொல்லணும்). அப்பத்தானே நானும் கவிதை எழுதிப் பழக முடியும். கடந்த கவிதை வாசித்து பாராட்டியவர்கள், இதைப் போய் கவிதைன்னு எழுதியிருக்கியேனு, திட்டிட்டு போனவர்கள் எல்லாருக்கும் நன்றிகள். இதையும் வாசித்துவிட்டு அப்படியே கீழே ஆளுக்கு ஒரு வாக்கு போட்டுட்டு போயிடுங்க..

Comments

  1. புதுசாத் தான் இருக்கு.....ஆனால் கவிதையில் முயற்சியை விட அனுபவங்கள் பற்றிய பதிவுதான் அதிகமாகத் தெரிகின்றது.

    ReplyDelete
  2. பரவாயில்லையே அனுபவத்த நல்லா கவிதையில சொல்லி இருக்கீங்க. நல்லா தான் இருக்கு ம் ம்...........

    ReplyDelete
  3. kanner mattum kaivasam..... unaku puriyala...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற...

அம்புகளும், சில ஆண்டவர்களும்

எங்கிருந்தோ வந்து விழுந்த அம்பு மரமொன்றில் கீறி காயம் செய்தது அந்த அம்பு முன்பொரு நாளில் அதே மரத்தில் கிளையொடித்து தீட்டப்பட்டதாம் அதுவே, பின்பொரு நாளில் மரத்தில் கீறி காயம் செய்ததாம்! காடுகள் சுற்றி தேடுதல் செய்து, கதைகள் பல சொல்லி தீட்டப்பட்ட, தீட்டப்படாத அம்புகள் சில அடைத்து வைக்கப்பட்டன… காலங்கள் ஓடி ஒழிய இன்றைப் போல் ஒரு பொழுதில், அடைத்த அம்புகள் சிலவற்றின் கூர் முனைகள் ஒடிக்க மரம் வளர்க்கும் ஆண்டவர் விரும்பினராம்! ஒன்றைப் போல் வேறு மரத்தில் விளைந்த இந்த அம்புகள் முனை ஒடிக்கப்படும் செய்தி அறிந்து, அந்த மரத்தின் சக அம்புகளும், கிளைகளும், கொடிகளும், வேரைப் போன்ற விழுதுகளும் வீதியிறங்கி குரல் எழுப்புகின்றனவாம்! எதுவாயினும், நாளைப் போல் ஒரு நாளில் எதுவும் நடக்கலாம்! அம்புகள் கூராக்கப்படுவதும், விற்கள் வளைக்கப்பட்டு ஆண்டவரால் அனுப்பி வைக்கப்படுவதும் பின் மாறி, ஆண்டவர் தலைகளைப் பதம் பார்ப்பதும், எதுவும் நடக்கலாம் ….. (இது அரசியல் கவிதை அல்ல)

கந்தசாமி – அப்படியும், இப்படியும்…

க ந்தசாமி … சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக விக்ரம் ரசிகர்களையே காத்திருக்க வைத்த திரைப்படம் . கடைசியாக வெளிவந்த விக்ரமின் “ பீமா ” திரைப்படம் பாரிய வெற்றியை சந்தித்திருக்காத நிலையில் , புதிய இயக்குநர்களின் வரவு , சூர்யா போன்றோரின் அர்ப்பணிப்புடனான நடிப்பு போன்ற பல போட்டிகளுக்கு மத்தியில் கந்தசாமி படம் வெளிவந்திருக்கின்றது . படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே பல பிரமாண்டங்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் அதிகரித்திருந்தன . படபூஜைக்கான அழைப்பிதழ் , படப் பாடல் வெளியீட்டின் போது கிராமங்களை தத்து எடுத்தமை என ஆரம்பம் அதிரடியாக இருந்த நிலையில் , படவெளியீடும் 1000 பிரதிகளுடன் பிரமாண்டமாகவே இருந்தது . தர்க்கரீதியாக பல ஓட்டைகள் நிறைந்த 3 மணித்தியாலங்கள் நீளமான படத்தின் கரு மிகவும் பழைய கதை . சங்கரின் படங்களில் பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட விடயம் . மிக அண்மையில் சிவாஜியில் கூட இந்த விடயம் தான் கூறப்பட்டிருந்தது . கருப்பு பணத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் முறை . சற்று மாறுப்பட்ட முறையை சுசிகணேசன் கந்தசாமிய...