Skip to main content

உலக மனிதாபிமான தினம்: வருந்திப் பாரஞ் சுமப்பவர்கள்

சர்வதேச ரீதியாக இயங்கி வரும் நிவாரணப் பணியாளர்கள் அல்லது தொண்டர்களை கௌரவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை இன்றைய தினத்தை(ஆகஸ்ட் 19) உலக மனிதாபிமான தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. முதலாவது உலக மனிதாபிமான தினம் என்ற ரீதியில் இன்றைய தினம் சிறப்பு பெறுகின்றது. சர்வதேச ரீதியில் நிவாரணப் பணியாளர்களின் செயற்பாடுகளை அங்கீகரிப்பதுடன் அவர்களுக்கான இடத்தை சமூகத்தில் பெற்றுக் கொடுப்பதே இந்த தினம் பிரகடனம் செய்யப்பட்டதற்கான .நாவின் பிரதான நோக்கமாக உள்ளது.
ஈராக்கின், பாக்தாத்தில் அமைந்துள்ள .நாவின் அலுவலகம் மீது 2003ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு 22 பேர் கொல்லப்பட்ட 6ஆவது வருட நிறைவு நாளையே உலக மனிதாபிமான தினமாக .நா பிரகடனப்படுத்தியுள்ளது.

நிவாரணப் பணியாளர்கள் பலவிதமான சிரமங்களுக்கு மத்தியிலேயே தமது கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசேடமாக உலகில் உள்நாட்டு யுத்தங்கள், எல்லைப் பிரச்சினைகள், இயற்கை அனர்த்தங்கள் போன்ற சம்பவங்கள் நடைபெறும் இடங்களே, இவர்களது பணியிடங்களாக காணப்படுவது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இவற்றின் மத்தியில் அவர்கள் முன்னெடுத்துச் செல்லும் மனிதாபிமான நடவடிக்கைகள் நிச்சயமாக கௌரவிக்கப்பட வேண்டிய ஒன்றே.

நடைமுறையில் உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்நாட்டு யுத்தங்கள், வன்முறைகள் என நிவாரணப் பணியாளர்களின் பணி மிகவும் அத்தியாவசியமானதாகியுள்ளதோடு, மிகவும் அபாயகரமான நிலையிலேயே அவர்களது பணிகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன. இவ்வாறான அபாயகரமான சூழ்நிலையில் செயற்பட்டு நிவாரணப் பணியாளர்கள் 122 பேர் கடந்த வருடத்தில் மாத்திரம் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த .நாவின் அமைதிகாக்கும் துருப்பினரின் எண்ணிக்கையை விட, இந்த எண்ணிக்கை அதிகமானது என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். கடந்த 10 வருடங்களில் மாத்திரம் சுமார் 700 நிவாரணப் பணியாளர்கள் கடமையில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்துள்ளனர்.

எனவே, உலக மனிதாபிமான தினமான இன்று, நிவாரணப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு தமது உயிரையே அர்ப்பணித்த அனைத்து நிவாரணப் பணியாளர்களையும் நினைவுகூருவதற்கான நாளாக காணப்படுகின்றது.
உலகின் மோதல் நிலவும் பல பகுதிகளில் மக்களின் உதவிகளுக்காகச் செல்லும் நிவாரணப் பணியாளர்கள் ஆயுதக்குழுக்களால் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்படுவது அல்லது கொல்லப்படுவது என்பன மிகவும் வருந்தத்தக்க விடயங்களாகும்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், பலஸ்தீனம், இஸ்ரேல், சூடான், சோமாலியா, கொங்கோ மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நிவாரணப் பணியாளர்களின் இன்றைய பணிகள் இன்றியமையாத ஒன்றாகியுள்ளன. இந்த அனைத்து நாடுகளிலும் நிவாரணப் பணியாளர்களுக்கான உயிர் அச்சுறுத்தலும் மறுக்க முடியாத ஒன்று. இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் அவர்களது அர்ப்பணிப்புடனான சேவை போற்றப்பட வேண்டியதே.

மனிதாபிமான நிவாரணப் பணி என்பதன் உண்மையான அர்த்தம், உலகெங்கிலும் இருக்கக் கூடிய அனைவருக்கும் அறியப்படுத்தப்படல் வேண்டும். உண்மையான மனிதாபிமான நிவாரணப் பணியென்பது மோதல்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு நிர்க்கத்தியாகியுள்ளவர்களுக்கு மாத்திரமல்லாது, வன்முறைகள், மோதல்களற்ற வளமான சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் அத்தியாவசியமான ஒன்று என்பதையும் மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.

“You gain strength, courage, and confidence by every experience by which you really stop to look fear in the face. You are able to say to yourself, 'I lived through this horror. I can take the next thing that comes along.” -ELEANOR ரூஸ்வெல்ட்-



Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற