Skip to main content

ஜனநாயகத்திற்கு ஒரு கடிதம்.................


அன்புள்ள ஜனநாயகத்திற்கு,

ஜனநாயக நாடொன்றின் குடிமகன் எழுதிக் கொள்வது. நலம், நலம் அறிய ஆவல் என்று தொடங்க முடியவில்லை. நீயில்லாத நாட்டில் நாங்கள் நலமோடு இருப்பது என்பது வெறும் கற்பனைதான். நான் பிறந்து கால் நூற்றாண்டுகளாகிவிட்டது. ஜனநாயகம் என்ற சொல்லை கேள்விபட்டு ஒரு தசாப்தங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. புத்தகங்களிலும், வரலாற்று நூல்களிலும் மாத்திரம் தான் அது எப்படி இருக்கும் என்று அறிந்துள்ளேன். இந்த நாட்டில் உனக்காக காத்திருக்கும் இலட்சம் பேரில் நானும் ஒருவனாக மாறிவிட்டேன். நீ இருப்பதாகவும், நாடெங்கும் நீக்கமற நிறைந்திருப்பதாகவும் பலர் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும்தான் இருக்கின்றார்கள். ஆனால், நான் ஒருபோதும் கண்டதில்லை. இந்த நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று வந்திருக்கின்றேன். அந்தப் பகுதிகளில் எல்லாம் உன்னை தேடிப் பார்த்திருக்கின்றேன். பலருக்கு உன்னைப் பற்றியே தெரியாது. பலருக்கு உன்னை காண ஆவல். பலருக்கு உன்னைப் பற்றி பேசினாலேயே வெறுப்பாக இருக்கின்றது.

என் அப்பா, அவரின் அப்பா என்று எல்லோரிடமும் கேட்டுவிட்டேன் உன்னைப்பற்றி. ஆனால் எவரும் உன்னைப் பார்க்கவில்லை. அதனால் தான் நேரடியாக உனக்கே இந்த கடிதத்தை எழுதிவிடத் துணிந்தேன். எப்படியும் உன்னைத் தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற ஆவல். உன்னைப் பற்றி பல தலைவர்கள் பேசுவதைக் கேட்டிருக்கின்றேன். ஆசையாகத் தான் இருக்கின்றது உன்னைப் பார்க்க. எனக்கு இன்றும் நல்ல நினைவு இருக்கின்றது. உன்னுடைய அம்சமாக கூறிக்கொள்ளும் தேர்தல் பொழுதொன்றில் வீட்டில் இருந்த என் பாட்டனிடம் போய் உன்னைப் பற்றி விசாரித்தேன். மிகவும் விரக்தியாக “குழி தோண்டிப் புதைத்துவிட்டார்கள்” என்றார். “அப்படியானால் உன்னைப் பார்த்திருக்கின்றாரா” என அவரிடம் மீண்டும் கேட்டேன். பிறந்த அன்றே சுவாசிக்கக் கூட அவகாசம் இன்றி இறந்துவிட்டதாக அவர் கூறினார். அவதாரங்களைப் பற்றியெல்லாம் இந்த உலகில் பலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். உன் அவதாரங்கள் சில உலக நாடுகளில் உலா வந்ததாகவும் வரலாறுகளில் படித்திருக்கின்றேன். எமது நாட்டைப் பற்றி உனக்கு தெரியாதது அல்ல. இப்போது நீ அவசியமாக இங்கு தேவை.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே மௌனம் காக்கப் போகின்றாய்? உன்னைப் பற்றி பேசிப் பேசியே இங்கு பலர் தலைவர்களாகி விட்டார்கள். ஆயுத முனையில் அமைதி பேசிக் கொண்டு, அதற்கு உன் பெயரை கூறி வருகின்றார்கள். அவர்களின் பேச்சு வல்லமைகளில் நீ பிராசரத்திற்கான கருவியாக மாறியிருப்பது வேதனையாக இருக்கின்றது. உன் எதிரிகள் உந்தன் பெயரில் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றார்கள். உந்தன் பெயரில் பல நிறங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் பலர், இடாம்பீக வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், உன்னையே நம்பிக் கொண்டிருக்கும் பலர் உன்னைப் பற்றி பேசுவதற்கே அஞ்சியிருக்க வேண்டிய சூழ்நிலை.

எல்லாத்தையும் மீறி நீ வருவாய் என்ற நம்பிக்கையில் பல தலைமுறைகள் காத்திருந்தும், நீ கல் நெஞ்சம் கொண்டவனாகவே இருக்கின்றாய். இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இந்த காத்திருப்பு தொடரப் போகின்றது. உன் மௌனம் இன்னும் நீண்டால் நாங்கள் கூடி வேறு வழிபற்றி சிந்திக்க வேண்டியிருக்கும். இது உனக்கான இறுதி அழைப்பு அல்லது இறுதி எச்சரிக்கை. எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், உனக்காக இன்னும் நீண்ட நாட்கள் நாங்கள் காத்திருப்போம் என்று நீ எண்ணியிருந்தால் அது வீண் கற்பனை மாத்திரமே.

இந்த மடலை தந்தி போல் பாவித்து பதில் அனுப்பு.
நன்றி,
ஜனநாயக தேசத்தில் வாழ துடிக்கும் ஒரு குடிமகன்.

Comments

  1. நன்றி....அண்ணாமலையான்
    நன்றி....என்ன கொடும சார்

    ReplyDelete
  2. ennuma namburenka????????? nankal than thatti parika vendum

    ReplyDelete
  3. நல்லதொரு காத்திரமான பதிவு நண்பரே...
    ஜனநாயகத்திர்ற்கு மடல் வரைந்தீர் அனால் அதன் முகவரிதாறீரோ? ஒசாமா பின் லடேனின் முகவரி கூட கண்டு பிடித்திடலாம் ஆனால் ஜனநாயகத்தின் முகவரி முடியாது...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற