Skip to main content

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....


நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம். கண்ணுக்கு குளிர்ச்சியான, என்னை, எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும், மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான். யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும், ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார். கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான், எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர், மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன். வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன்மச்சான், இந்த படம் உன்ர கதைடாஎன்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன்.

இந்தப்
படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்றது என்று சொல்லிவிடலாம். “உலகத்திலே எவ்வளவோ பொண்ணுக இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினன்?” என்று தான் படம் ஆரம்பிக்கின்றது. உண்மையாக காதலிக்கும் எல்லோருக்குள்ளும் வரும் கேள்வி இது. அதிலும், காதல் மாத்திரம் கிடைத்து, காதலி கிடைக்காது போகும் பலர் ஏங்கித் தவிக்கும் புள்ளியும் இதுதான். படத்தின் முடிவில் இருந்து எழுத ஆரம்பிக்கலாம் என நினைக்கின்றேன். ஜெஸ்ஸி, கார்த்திக்கை பார்த்து கூறுவார், நல்லதொரு பெண்ணாய் பார்த்து காதலில் விழு என்று. தற்கு கார்த்திக் மனதின் எதிரொலியாய் ஒரு பதில். இந்த வலி எனக்கு பிடிச்சிருக்கு. இந்த சந்தர்ப்பத்தை வாழ்வில் அனுபிவத்தவன் என்ற வகையில் படம் இன்னும் பிடித்திருக்கின்றது. இப்படி கார்த்திக்கிற்கும், ஜெஸ்ஸிக்கும் இடையில் நடக்கும் பல உரையாடல்கள் என் கடந்த காலத்தின் பல நிகழ்வுகளை திருப்பிப் போட்டு நேற்றிரவு என்னை உறங்கவிடாமல் செய்துவிட்டன.ஒரு பெண். அந்த பெண்ணை பார்த்தவுடன் காதல் என்பதில் கடுகளவும் நம்பிக்கை இல்லாமல் திரிந்த காலமொன்றும் இருந்தது. நண்பர்களையும், காதலிப்பவர்களையும் பைத்தியங்கள் என்று பேசித் திரிந்த காலம் அது. இந்த படத்தில் வருவதைப் போல் ஒரு பொழுதில் புடவையில் என் காதலியை கண்ட அந்த கணமே எல்லாம் பொய்யாகி போனது. அதற்கு பின்னர் அவளை தினந்தோறும் பார்க்க தவித்திருந்த நாட்கள். தினந்தோறும் பார்த்து ரசித்த பொழுதுகள் என என் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள். இந்த கதையுடன் என்னை ஒன்றிப் போகச் செய்து விட்டன.

கார்த்திக் எனும் கதாபாத்திரத்திற்கு அருமையாக பொருந்தியிருக்கின்றார் சிம்பு. கதாநாயகனுக்கான ஆடம்பரங்கள் இல்லாத உடையமைப்பு நம்மில் ஒருவராய் அவரை ஏற்றுக் கொள்ள வைக்கின்றது. திரிஷாவுக்கு நடிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. பல படங்களில் பாடல்களில் மாத்திரம் கதாநாயகியாக வலம் வந்த திரிஷா, ஜெஸ்ஸியாக நூறுவீதம் பொருந்தியிருக்கின்றார். ஒரு அருமையான காதல் கதைக்கு, அருமையான காட்சியமைப்பு முக்கியம் என்பதை உணர்ந்திருக்கின்றார் கௌதம் வாசுதேவ மேனன். அதை நிஜமாக்கியிருக்கின்றார் ஒளிப்பதிவாளர் மனோஜ். அதேப்போல் கண்கள் கூசாத திரைக்கதைக்கு ஏற்ற படத்தொகுப்புக்கும் ஆண்டனியை பாராட்டியே ஆக வேண்டும். பின்னணி இசை மற்றும் பாடல்கள் பற்றி கூறத்தேவையே இல்லை. .ஆர்.ரஹ்மான் மீண்டும் நிரூபித்திருக்கின்றார். நகைச்சுவைக்கென தனித்து யாரும் இல்லாத போதிலும், கார்த்திக் நண்பராக, படத்தில் ஒளிப்பதிவாளராக வரும் கணேஷ் (படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்) முகங் காட்டும் காட்சிகளில் இயல்பான, இடைஞ்சல் இல்லாத, திணிக்கப்படாத நகைச்சுவை, படத்தை ரசிக்க வைக்கின்றது. கௌதம் வாசுதேவ மேனனின் எல்லாப் படங்களையும் போன்றே கதாபாத்திரத் தேர்வு இந்தப் படத்திலும் பொருந்தியிருக்கின்றது.
அலுப்பில்லாத, இருக்கையில் நெளிய வைக்காத அருமையான திரைக்கதை. ஒரு சிறிய கரு. இரண்டரை மணித்தியாலங்கள். ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் காதலித்தவளை விட்டு பிரிந்து, காதல் நினைவுகளை மாத்திரம் சேமித்து, கனவுகளை மாத்திரம் சுமந்து கொண்டு, வாழ்நாளை மீட்டிக் கொண்டிருக்கும் எல்லோர் மனதையும் (நான் உட்பட) உருகச் செய்யும் என்பதில் சந்தேகமேயில்லை.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் கண்ணின் ஓரமாய் கசிந்த துளிகளை யாரும் காணாமல் துடைத்துவிட்டு திரையரங்கிற்கு வெளியே வந்துவிட்டேன். மீண்டும் ஒருமுறை தனித்துச் சென்று ரசித்து பார்க்கவேண்டும்.

விண்ணைத் தாண்டி வருவாயா……மனதின் ஆழமாய் சென்று உயிரை தீண்டியிருக்கின்றது…..

Comments

  1. super..

    //விண்ணைத் தாண்டி வருவாயா……மனதின் ஆழமாய் சென்று உயிரை தீண்டியிருக்கின்றது…../

    are you a poet?

    ReplyDelete
  2. புரிகிறது.. எல்லோர் மனதையும் படம் தீண்டியிருக்கிறது.. கொஞ்சமாவது..

    //நீண்ட நாட்களுக்குப் பின்னர் கண்ணின் ஓரமாய் கசிந்த துளிகளை யாரும்காணாமல் துடைத்துவிட்டு//
    &
    //மீண்டும் ஒருமுறை தனித்துச் சென்று ரசித்து பார்க்கவேண்டும்.
    //

    :) காத்திருத்தல் = காதல்

    ReplyDelete
  3. nice critics......

    ReplyDelete
  4. super..

    //விண்ணைத் தாண்டி வருவாயா……மனதின் ஆழமாய் சென்று உயிரை தீண்டியிருக்கின்றது…../

    are you a poet?

    நன்றி..... i m nt a poet.. .bt i lyk 2 wr8 poems.....i did sme too..

    ReplyDelete
  5. //வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “மச்சான், இந்த படம் உன்ர கதைடா” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன்.//

    அட உங்களுடையதுமா
    அப்ப சரி உங்கள் கவிதைகளுக்கு பின்னும் ஒரு ஜெஸ்ஸி இருக்கிறாள்

    ReplyDelete
  6. நன்றி தர்ஷன்.... ஆமாங்க ஒரு ஜெஸ்ஸி ஆழமா மனசுல இருக்காங்க..... ஆனா பக்கத்தில இல்ல.....

    ReplyDelete
  7. மனதிலுள்ள அத்தனை கனங்களையும் எழுத்துருவில் கொட்டி விட வேண்டும் என துடிக்கிறேன்,
    ஆனால் மீண்டும் பலவீனமானவளாக.....
    தான் படும் வேதனையிலும் தன்னால் மற்றவர் படும் வேதனையை பார்க்கும் போது ஏற்படும் வலி தான் மிக மிக கொடுமை...

    காலம் கடந்த நிலையிலும் கண்ணீர் துளிகளுடன்......

    ReplyDelete
  8. you have just copied from other reviews and past it here. what is the need to do that. Every review i have so far read about this movie is exactly the same. why would you just post some as if you written it. grow up and write something on ur own.

    good luck with the future stuff.

    ReplyDelete
  9. @ Anonymous

    நன்றி....

    @ Jay.....
    thx 4 visitin n 4 ur coments..it may b sam as others..i wil try 2 think diffrntly than othr in future....

    ReplyDelete
  10. shermi..


    நீண்ட நாட்களுக்குப் பின்னர் கண்ணின் ஓரமாய் கசிந்த துளிகளை யாரும் காணாமல் துடைத்துவிட்டு திரையரங்கிற்கு வெளியே வந்துவிட்டேன். மீண்டும் ஒருமுறை தனித்துச் சென்று ரசித்து பார்க்கவேண்டும்.

    nice..

    ReplyDelete
  11. unkaludaiya aakkankal yaavum mika mika nanraaka ullathu unkal pothu seevaikalum paaraattavendiya vidayam unkal kavithaikal,anupavankal mattum pothu vidayankal ellaame sinthikka vaikirathu thodarattum unkal pani,

    nandri

    Vathani

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….