உலகமே வெகுவாக சுருங்கிவிட்டது. மின்னஞ்சல்- மின்னரட்டை என பல அவதாரங்கள் எடுத்த தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகம், புளொக்கினூடாக புதியதோர் பரிணாமத்தை எட்டியிருக்கின்றது எனலாம். எதுவுமே ஒரு மையப்புள்ளியில் தொடங்குகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளும் எவரும், அது ஒரு மையப்புள்ளியில் முடிவை எட்டும் என்பதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.அண்மையில் நான் வாசித்த ஒரு சஞ்சிகை ஒன்றில் ஒரு விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது நான்காவது உலகப் போர் பற்றிய ஒரு எதிர்வுகூறலாக அதனை வரைவுபடுத்திவிடலாம். ஒரு பிரசித்திப் பெற்ற விஞ்ஞானியான அல்பிரட் ஐன்ஸ்டீனின் கருத்துதான் அது. அதில் " மூன்றாம் உலகப் போரில் மனிதன் எவ்வகையான ஆயுதங்களை பயன்படுத்தப் போகின்றான் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட விடயம் எனும் அவர், நான்காவது உலகப் போரில் மனிதன் பயன்படுத்தப் போகும் ஆயுதம் வெறும் கல்லும், தடியும் மட்டுமே என அவர் கூறுகின்றார்.அதாவது:"I know not with what weapons World War 3 will be fought, but World War 4 will be fought with sticks and stones"
ஆக, இந்த தொழில்நுட்ப வளர்ச்சிகளும் ஒரு கட்டத்தில் தரித்த நிலையை அடையும். எதுவாகினும், இந்த வளர்ச்சி புதிய நட்பு வட்டத்தை உருவாக்கி தருவதுடன், நிகழ்வுகளை துரித கதியில் உலக அரங்கில் பதிவு செய்வதற்க உறுதுணையாகின்றது. மூன்றாம் உலக நாடுகள் இந்த புதிய வளங்களை நுகர்வதற்கு, வல்லாதிக்க நாடுகளைவிட காலங்கடந்தே கிடைக்கின்றது. அதிலும் சில நவீன வசதிகளை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் தாமதங்கள் இந்த பழையதாகிவிட்ட வலைப்பின்னலில் கொஞ்சம் தாமதமாகவே எனக்கான பதிவை ஆரம்பிக்க காலம் கிடைத்திருக்கின்றது. எனது அனுபவங்களையும், எனக்கான ஆதங்கங்கள், எண்ணங்களையும் வெளிப்படுத்துவதற்கும், அதற்கான விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதற்கு தயாராகியிருக்கிறேன். புதிதாக வாசிக்க விரும்பும், புதிதாக பல விடயங்களை அறியத் துடிக்கும், ஒரு சாதாரண தமிழனாக என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு புளொக் எனும் தொழில்நுட்ப சலவையில் பயனுள்ள பல விடயங்களை பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்துடன் இணைந்து கொண்டுள்ளேன்.......
ஆக, இந்த தொழில்நுட்ப வளர்ச்சிகளும் ஒரு கட்டத்தில் தரித்த நிலையை அடையும். எதுவாகினும், இந்த வளர்ச்சி புதிய நட்பு வட்டத்தை உருவாக்கி தருவதுடன், நிகழ்வுகளை துரித கதியில் உலக அரங்கில் பதிவு செய்வதற்க உறுதுணையாகின்றது. மூன்றாம் உலக நாடுகள் இந்த புதிய வளங்களை நுகர்வதற்கு, வல்லாதிக்க நாடுகளைவிட காலங்கடந்தே கிடைக்கின்றது. அதிலும் சில நவீன வசதிகளை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் தாமதங்கள் இந்த பழையதாகிவிட்ட வலைப்பின்னலில் கொஞ்சம் தாமதமாகவே எனக்கான பதிவை ஆரம்பிக்க காலம் கிடைத்திருக்கின்றது. எனது அனுபவங்களையும், எனக்கான ஆதங்கங்கள், எண்ணங்களையும் வெளிப்படுத்துவதற்கும், அதற்கான விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதற்கு தயாராகியிருக்கிறேன். புதிதாக வாசிக்க விரும்பும், புதிதாக பல விடயங்களை அறியத் துடிக்கும், ஒரு சாதாரண தமிழனாக என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு புளொக் எனும் தொழில்நுட்ப சலவையில் பயனுள்ள பல விடயங்களை பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்துடன் இணைந்து கொண்டுள்ளேன்.......
Comments
Post a Comment