Skip to main content

மரணத்தின் ப்ரியம்


ஒரு மரணத்தைப் பற்றி கேள்விப்படுகையில்
தயவு செய்து உங்கள் பணிகளை
தொடர்ந்து செய்து அவமதிக்காதீர்கள்

சொற்களற்ற பிரதேசமொன்றில்
இருப்பது போலான பாவனையில்
மௌனிக்காதீர்கள்

மடிந்தவர்களின் ஆவியைப் பார்த்து
நாய்கள் குரைப்பதாகவும்
அமைதியற்ற உடலை
சுமந்தலையும் இறந்தவர்களுக்கான
பெரும்காற்று
கிளம்பி சுழன்றடிப்பதாகவும்
சொல்லும் நீங்கள் ஒரு கணமேனும்
நின்று நிதானியுங்கள்
பாதைகள் தோறும்
பிணங்களுக்கான கதறும் ப்ரியங்கள்
எல்லோரின் காலடியிலும்
நசுங்கியபடியிருக்கின்றன.
-க.அம்சப்ரியா-
(நீண்ட நாட்களுக்கு முன்னர் அம்ருதா என்ற இந்தியா சஞ்சிகையொன்றில் நான் வாசித்த கவிதை இது. வாசிப்பதோடு, பலரை வாசிக்க வைக்க வேண்டிய ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வை இந்த கவிதை எனக்குள் ஏற்படுத்தியது. அதனால் உங்களுடன் இந்த கவிதையை பகிர்ந்து கொள்கின்றேன்.)

Comments