
ஒரு மரணத்தைப் பற்றி கேள்விப்படுகையில்
தயவு செய்து உங்கள் பணிகளை
தொடர்ந்து செய்து அவமதிக்காதீர்கள்
சொற்களற்ற பிரதேசமொன்றில்
இருப்பது போலான பாவனையில்
மௌனிக்காதீர்கள்
மடிந்தவர்களின் ஆவியைப் பார்த்து
நாய்கள் குரைப்பதாகவும்
அமைதியற்ற உடலை
சுமந்தலையும் இறந்தவர்களுக்கான
பெரும்காற்று
கிளம்பி சுழன்றடிப்பதாகவும்
சொல்லும் நீங்கள் ஒரு கணமேனும்
நின்று நிதானியுங்கள்
பாதைகள் தோறும்
பிணங்களுக்கான கதறும் ப்ரியங்கள்
எல்லோரின் காலடியிலும்
நசுங்கியபடியிருக்கின்றன.
-க.அம்சப்ரியா-
தயவு செய்து உங்கள் பணிகளை
தொடர்ந்து செய்து அவமதிக்காதீர்கள்
சொற்களற்ற பிரதேசமொன்றில்
இருப்பது போலான பாவனையில்
மௌனிக்காதீர்கள்
மடிந்தவர்களின் ஆவியைப் பார்த்து
நாய்கள் குரைப்பதாகவும்
அமைதியற்ற உடலை
சுமந்தலையும் இறந்தவர்களுக்கான
பெரும்காற்று
கிளம்பி சுழன்றடிப்பதாகவும்
சொல்லும் நீங்கள் ஒரு கணமேனும்
நின்று நிதானியுங்கள்
பாதைகள் தோறும்
பிணங்களுக்கான கதறும் ப்ரியங்கள்
எல்லோரின் காலடியிலும்
நசுங்கியபடியிருக்கின்றன.
-க.அம்சப்ரியா-
(நீண்ட நாட்களுக்கு முன்னர் அம்ருதா என்ற இந்தியா சஞ்சிகையொன்றில் நான் வாசித்த கவிதை இது. வாசிப்பதோடு, பலரை வாசிக்க வைக்க வேண்டிய ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வை இந்த கவிதை எனக்குள் ஏற்படுத்தியது. அதனால் உங்களுடன் இந்த கவிதையை பகிர்ந்து கொள்கின்றேன்.)
Comments
Post a Comment