எங்கிருந்தோ வந்து விழுந்த அம்பு மரமொன்றில் கீறி காயம் செய்தது அந்த அம்பு முன்பொரு நாளில் அதே மரத்தில் கிளையொடித்து தீட்டப்பட்டதாம் அதுவே, பின்பொரு நாளில் மரத்தில் கீறி காயம் செய்ததாம்! காடுகள் சுற்றி தேடுதல் செய்து, கதைகள் பல சொல்லி தீட்டப்பட்ட, தீட்டப்படாத அம்புகள் சில அடைத்து வைக்கப்பட்டன… காலங்கள் ஓடி ஒழிய இன்றைப் போல் ஒரு பொழுதில், அடைத்த அம்புகள் சிலவற்றின் கூர் முனைகள் ஒடிக்க மரம் வளர்க்கும் ஆண்டவர் விரும்பினராம்! ஒன்றைப் போல் வேறு மரத்தில் விளைந்த இந்த அம்புகள் முனை ஒடிக்கப்படும் செய்தி அறிந்து, அந்த மரத்தின் சக அம்புகளும், கிளைகளும், கொடிகளும், வேரைப் போன்ற விழுதுகளும் வீதியிறங்கி குரல் எழுப்புகின்றனவாம்! எதுவாயினும், நாளைப் போல் ஒரு நாளில் எதுவும் நடக்கலாம்! அம்புகள் கூராக்கப்படுவதும், விற்கள் வளைக்கப்பட்டு ஆண்டவரால் அனுப்பி வைக்கப்படுவதும் பின் மாறி, ஆண்டவர் தலைகளைப் பதம் பார்ப்பதும், எதுவும் நடக்கலாம் ….. (இது அரசியல் கவிதை அல்ல)
//இருளை விழுங்கி
ReplyDeleteபயங்கர மௌனத்தையும்
அச்சத்தையும்
பிரசவிக்கும்
கொடுரமான தனிமையில் //
நல்லாவே எழுதறீங்க தல
நன்றிண்ணா! தலைன்னெல்லாம் சொல்லாதீங்க! அனுபவத்துல வருது!
ReplyDeleteகோபிநாத்-ங்கற பேர்ல ஏற்கனவே ஒரு பதிவர் இருக்காரு. அவர்தான் கவிதை எழுதியிருக்காரோன்னு கொஞ்சம் பயந்துட்டேன் :-)
ReplyDeletenice one Gopi!
ReplyDelete//கோபிநாத்-ங்கற பேர்ல ஏற்கனவே ஒரு பதிவர் இருக்காரு. அவர்தான் கவிதை எழுதியிருக்காரோன்னு கொஞ்சம் பயந்துட்டேன் :-)//
ReplyDeleteநல்ல வேளை என் கவிதையைப் பார்த்து பயந்துட்டீங்களோன்னு நினைச்சேன்... நன்றி நண்பா...
//nice one Gopi!//
ReplyDeleteநன்றி ராம்...
Hmmmmmmmmmmmm
ReplyDelete