
மயிர்க்கால்கள் வீங்க
தன்னையும் அறியாது
சிறுநீர் கழிக்கும் சிறுவன்.....
பேருந்து நெரிசலில் ,
தொலைந்து போன
ஒரு மாத வியர்வை ,
விண்மீன்களை போட்டிக்கழைக்கும்
தொடர் மாடி வீடுகள் ,
தொழில்நுட்ப நெரிசலில்
வீதியோர சந்திப்பில்
போலி புன்னகை ,
இத்தனைக்கும் மத்தியில்
கடற்கரை நோக்கி பயணிக்கும் கால்கள்,
அமைதி தேடி...........
(இந்த கவிதையும் "பயில்நிலம்" இதழில் வெளிவந்த ஒன்று தான். குழலி என்ற புனைப்பெயரில் எழுதியிருந்தேன். என்னால் எழுதப்பட்டு எனக்கு பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று)
Comments
Post a Comment