
எத்தனை முறை
என் நினைவேட்டின்
கடைசி வரியில்
உன்னை மறைத்து வைத்தாலும்,
உன் நிஜங்கள் செவி நனைக்க
தென்றல் பட்ட மலராய் ..
கலைந்து போகின்றேன்.
உன் சிணுங்கல்கள் என்னை சிதைத்ததுப் போலவே
உன் மௌனமும்,
என்னை முகாரி இராகங்களுக்கு
அடிமையாக்கியது.
என்
நிஜங்களையும் கனவுகளையும்,
உன்
நினைவுகளுக்கே அளித்தேன்..
ஆனால்,
நீ எனக்காய் தந்தது
உன் மறுப்பை மட்டும் தான்,
என்றாவது ஒரு நாள்...
என் இதயத்தின்
வெகு ஆழத்தில்
நீ அமிழ்ந்து போவாய்..
அன்று,
நான் இல்லாத உனக்காய்,
அனுதாபப்படும்
இவ்வுலகம்..
//எத்தனை முறை
ReplyDeleteஎன் நினைவேட்டின்
கடைசி வரியில்
உன்னை மறைத்து வைத்தாலும்,
உன் நிஜங்கள் செவி நனைக்க
தென்றல் பட்ட மலராய் ..
கலைந்து போகின்றேன்//
நல்ல கவிதை கோபிநாத். வாழ்த்துகள்
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
ReplyDeleteதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்
உணர்வுகளை பிரதிபளிக்கத்தக்க அருமையான வரிகள்
ReplyDeleteவாழ்த்துக்கள் பதிவுலகில் நுழைந்தமைக்கு !
Priyamudan
டயானா
உணர்வுகளை பிரதிபலிக்கத்தக்க அருமையான வரிகள்
ReplyDeleteவாழ்த்துக்கள் பதிவுலகில் நுழைந்தமைக்கு !
ப்ரியமுடன்
டயானா
மிக்க நன்றி பிரேம்குமார்...
ReplyDeleteமிக்க நன்றி டயானா...
இடைவெளி விடாது தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteஉங்கள் கவியாற்றல் மேலும் வலுப்பட வாழ்த்துக்கள்
ஆய்வு செய்பவர்கள்
ReplyDeleteநிறுத்திக் கொள்ளுங்கள்
காரணம் கண்டுபிடிக்கப்
பட்டுவிட்டது.
பூமித்தாயின் புழுக்கத்திற்கு
காதல் ஏற்றுக் கொள்ளப்படாத
கவிஞர்கள் வடிக்கிறார்கள்
கவிதை(கண்ணீர்)
எழுதும் போது நெஞ்சம் எறிகிறது
கைகள் கனல்கின்றன
அக்கினியாய்!
காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால்
ஏற்றுக் கொள்பவளைக் காதலி
எழுதுபவர்கள் கவிஞர்கள் தான்
தனக்கென வரும்போது
தலைகவிழ்வது ஏன்?
பேனா கையில் ஈரம் இல்லை என்றால்
இவர்களில் எல்லா கவிதைகளும்
எரிந்து போயிருக்கும்.. எப்போதோ...
நெஞ்சத் தனலின் நெருப்பு நாவால்
எழுதுவதை நிறுத்திக் கொண்டு
மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள்
கவிதைகளை மானுடம் சிறப்புறட்டும்
"குளோபல் வோமிங்"
கொஞ்சமாவது தணியும்..
என்
ReplyDeleteநிஜங்களையும் கனவுகளையும்,
உன்
நினைவுகளுக்கே அளித்தேன்..
ஆனால்,
நீ எனக்காய் தந்தது
உன் மறுப்பை மட்டும் தான்...
நீயில்லா நான்....
உன்னை விரும்பிய நான் சுயநல வாதியா - அல்ல
ReplyDeleteஎன்னை வெறுத்த நீ சுயநல வாதியா - அல்ல
என் காதலே வெறும் சுயநலம் தானா???????