
நிறைந்த
யதார்த்தம் ,
காற்றலைகள் வேவுகருவிகளாக
தொடரும் மௌனம் ,
அண்டவெளியை முத்தமிடும்
விஞ்ஞானம்,
நாகரிக ஆழத்தின்
நச்சுப் பொறியில் உயிர்கள்,
கல்வி விருந்து
பணப் பரிமாற்றம்,
சமாதானப் பந்தியில்
ஆயுத அறிமுகம்,
கலவி இன்றி
ஜனிக்கும் உயிர்கள்,
இயற்கை வயலில்
வியாதிக் களைகள்,
ஊடக வலையில்
உணர்ச்சி செலவு,
அது,
'நேற்று' பிரசவித்த
'இன்று' குழந்தை...
இந்த கவிதை நீண்ட நாட்களுக்கு முன் 'பயில் நிலம்' என்ற சஞ்சிகைக்காக என்னால் எழுதப்பட்ட கவிதை. நான் முதன் முதலாக எழுதிய கவிதை என்றும் சொல்லலாம். அதற்கு முன் சும்மா பல காதல் கவிதைகள் எழுதியிருக்கின்றேன். நண்பர்களுக்கு காதல் கடிதங்கள் என்ற பேரில் பல கவிதை முயற்சிகளும் இருக்கின்றன. எனினும், அட நீயும் நல்ல கவிதை எழுதுறியே என்று பலரை சொல்ல வைத்த கவிதை இதுதான்!
Comments
Post a Comment