Skip to main content

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஹெரி ட்ருமனின் வார்த்தையை காப்பாற்றிய பராக் ஒபாமா....

உலக பொருளாதார நெருக்கடி, சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசம், வடகொரியாவின் அணுத்திட்டங்கள், பாகிஸ்தானில் தீவிரவாதம் (நம்ம இலங்கை பிரச்சினையும் தான்) என சிதறிக் கிடந்த உலகத்தின் கவனம் நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை சுற்றி வந்தது தெரியுமா? உலகின் பார்வை மட்டும் அல்ல இன்னுமொர் ஜீவனும் நேற்று வெள்ளைமாளிகையை சுற்றி வந்துள்ளது. அமெரிக்க தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், வானொலிகள் என்று எல்லாவாற்றிலும் அந்த நான்கு கால் ஜீவனுக்குத்தான் முதலிடம். அது யார் என்று யோசிக்கின்றீர்களா? அது வேறு யாருமில்லை. 'போ" என்ற நாய்க்குட்டித்தான் அத்தனை ஊடகங்களையும் கட்டிப்போட்ட செய்தி.அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி முதற் பெண்மணி போல, 'போ" இப்போது அமெரிக்காவின் முதல் நாய் (என்ன கொடுமை சார்?) 6 மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற போது தனது மகள்களுக்கு அளித்த வாக்குறுதியின் நிறைவேற்றம் தான் இந்த 'போ". (நிறைய அரசியல் தலைவர்கள் தேர்தல் காலங்களில் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதியை விட தனது உறவுகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதுதான் அதிகம். அந்த வகையில் ஒபாமா தனது உறவுகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள்? பொறுத்திருந்து பார்ப்போம்.)
அது என்னடா? தலைப்பில் ஹெரி ட்ருமன் பற்றி ஏதோ சொல்லியிருக்கின்றீர்களே! இதுவரை அது தொடர்பில் எதையும் காணவில்லையே என்று நீங்கள் தேடுவது புரிகின்றது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஹெரி ட்ருமனிடம் உங்களுடைய சிறந்த நண்பன் யார் என்று ஊடகமொன்றால் கேட்கப்பட்ட கேள்விக்கு, 'வொஷிங்டன் நகரிலே உங்களுக்கு சிறந்த நண்பர் வேண்டும் என்றால் ஒரு நாயை வாங்கி வளர்க்கவும்" என்று பதலளித்தாராம். ஆக ஒபாமாவுக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்து விட்டார். அத்துடன் ஹெரி ட்ருமனின் வார்த்தையையும் காப்பாற்றி விட்டார்.

இன்னொரு விடயம் தெரியுமா? நம்ம 'போ" வை நாளாந்தம் சுழற்சி முறையில் வோக்கிங் (அதுதாங்க, நாய்க்குட்டியை இயற்கை அழைப்புக்காக காலையிலும், மாலையிலும் நடக்க கூட்டிப் போறது.) கூட்டிப் போகவுள்ளதாக ஒபாமா அறிவித்துள்ளார். அது என்ன சுழற்சி முறைன்னு கேட்கிறீங்களா? ஜோன் பியுக்கனனிடம் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளர்) கேட்ட நல்ல தெளிவா, விளக்கமா சொல்லுவார்.

நம்ம 'போ" வெள்ளை மாளிகையிலதான் தங்கப் போகிறார். அப்போ, அவர் எங்கே நித்திரை கொள்வார்? (நான் கேட்ட கேள்வி இல்லீங்க. அமெரிக்க ஊடகங்கள் கேட்ட கேள்வி) அதற்கு, தன்னுடைய படுக்கை அறையில் இல்லை என்றும் ஒபாமா ஊடகங்களுக்கு பதலளித்திருக்கிறார்.


'போ" பற்றி பின்குறிப்பு: 'போ" டெக்ஸாஸ் மாநிலத்தில் பிறந்து, வொஷிங்டன் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஒரு மாதம் வளர்க்கப்பட்டிருக்கின்றது. அதன் பின்னர் செனட்டர் எட்வர்ட் கென்னடி வீட்டில் ஒரு மாதம் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து நாய்களை பயிற்றுவிக்கும் இடத்தில் ஒரு மாதம் இருந்துள்ளது. தற்போது வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளது. செனட்டர் எட்வர்ட் கென்னடி பராக் ஓபாமாவுக்கு இந்த நாய்க்குட்டியை பரிசளித்துள்ளார். 'போ"வுக்கு தற்போது வயது 6 மாதங்கள். கறுப்பு வெள்ளை நிறத்திலான இந்த நாய்க்குட்டி போர்த்துக்கேய நீர்நாய் வகையைச் சார்ந்தது.

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….