Skip to main content

நான் மரித்தவன்....

நீண்ட மௌனம்….
திடீரென பீறிட்டு எழும்
அழுகுரல்கள்….
சிறு வயது முதல்
நான் கேட்டுப் பழகிய குரல்கள்….
எழ முயற்சிக்கிறேன்.

அவர்கள் ஏன் அழுகிறார்கள்….
என் கண்கள் பார்வையற்றதாகி….
எல்லாமே இருளாக இருக்கின்றது….

என்னால் அசையமுடியவில்லை
நன்றாகப் பழகிப் போனவர்களின் குரல்கள்
வெகு அருகில்
பின் விலகிப் போகின்றன.
நேரம்…காலம்…..
எதுவுமே தெரியவில்லை….
எல்லாமே இருளாக இருக்கின்றது…

கண்கள் மூடித்தானே இருக்கின்றன….
உறங்க முயற்சிக்கின்றேன்…
முடியவில்லை…..

கைகள், கால்கள், உடல் எதுவுமே
அசைவதாயில்லை…

திடீரென அழுகுரல்களின் ஒலி அதிகரிக்கின்றது
அப்படியே அழுந்தி
மெதுவாக குறைகின்றது….
உடலில் சின்னதாய் அசைவு…..

சிறிது நேரத்திற்கு அமைதி…..
என் உடலின் அசைவு நிற்கின்றது…
மீண்டும் அதே அழுகுரல்கள்…

மிக நெருக்கமாய் கேட்கின்றன….
சிறிது சிறிதாய் குறைகின்றன….
உடல் தகிப்பதை போல்
ஒரு உணர்வு…..

ஒரே புழுக்கமாய் இருக்கின்றது…..
என் உடல் எரிகின்றது…
எல்லாம் இப்போது எனக்கும் புரிகின்றது…
நான் மரித்துவிட்டேன்….

அண்மையில் சிக்மன் புரொய்ட் எழுதிய கட்டுரை ஒன்றினை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. "ஒவ்வொரு மனிதனும் ஆழ்மனதில் மரணத்தை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கின்றான்" என அவர் குறிப்பிடுகின்றார். அனைவருமே மரணத்தை வெறுக்கின்றார்கள்(நான் உட்பட).வாழ்வதிலே அனைவருக்கும் அத்தனை விருப்பு. அதற்காகத்தானே இத்தனை போராட்டமும். ஒரு வித்தியாசமான முயற்சியாக இறந்தவனாக இருந்து இதனை எழுதியிருக்கின்றேன்.

Comments

  1. இறந்த பின் பிறந்த கவிதை அருமை அண்ணா....

    வித்தியாசமான ஒரு கவிதை... வாழ்த்துக்கள் அண்ணா... அப்படியே என் கவிதையையும் கொஞ்சம் வாசித்துத் தான் பாருங்களேன்.....

    ReplyDelete
  2. ஆஹா! அருமை! மாறுபட்ட சிந்தனை, எத்தனை பேருக்கு இது கைவரும் ?!

    ReplyDelete
  3. நன்றி நெல்லை. எஸ். சரவணகுமார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற...

கந்தசாமி – அப்படியும், இப்படியும்…

க ந்தசாமி … சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக விக்ரம் ரசிகர்களையே காத்திருக்க வைத்த திரைப்படம் . கடைசியாக வெளிவந்த விக்ரமின் “ பீமா ” திரைப்படம் பாரிய வெற்றியை சந்தித்திருக்காத நிலையில் , புதிய இயக்குநர்களின் வரவு , சூர்யா போன்றோரின் அர்ப்பணிப்புடனான நடிப்பு போன்ற பல போட்டிகளுக்கு மத்தியில் கந்தசாமி படம் வெளிவந்திருக்கின்றது . படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே பல பிரமாண்டங்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் அதிகரித்திருந்தன . படபூஜைக்கான அழைப்பிதழ் , படப் பாடல் வெளியீட்டின் போது கிராமங்களை தத்து எடுத்தமை என ஆரம்பம் அதிரடியாக இருந்த நிலையில் , படவெளியீடும் 1000 பிரதிகளுடன் பிரமாண்டமாகவே இருந்தது . தர்க்கரீதியாக பல ஓட்டைகள் நிறைந்த 3 மணித்தியாலங்கள் நீளமான படத்தின் கரு மிகவும் பழைய கதை . சங்கரின் படங்களில் பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட விடயம் . மிக அண்மையில் சிவாஜியில் கூட இந்த விடயம் தான் கூறப்பட்டிருந்தது . கருப்பு பணத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் முறை . சற்று மாறுப்பட்ட முறையை சுசிகணேசன் கந்தசாமிய...

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல...