Skip to main content

காதலிச்சு...

ஓன் பேர
பச்ச குத்தி பட்ட காயம்
ஆற முன்ன….
ஓன் கல்யாண பத்திரிக்க
கொண்டு வந்து நீட்டுறியே….

என் கைய புடிச்சிகிட்டு
கடலோரம் நடக்கயில…..
நீ தந்த வாக்கெல்லாம்
காத்தாகி போயிடுச்சே…..

ஒன்னால நா பட்ட காயமெல்லாம் ஆறிரும்…
ஆனா….ஒன் மொகத்த
என் மனசு எப்படி மறக்கும்…..

தலைவார போகயில….
கண்ணாடியில ஒன் மொகந்தானே தெரியுது…

கண்ண மூடி அசரயில
ஏன் புள்ள கனவுல நீ வந்து தொலைச்ச….
என்ன விட்டு இப்போ நீ போயி தொலைஞ்ச….

பாசந்தான் பெரிசுன்னு நீ பிரிஞ்சு போன….
நா வெச்ச பாசத்த நீ
நெனச்சு பாக்கலியே….

நீ பாக்க
ஒன் முன்னாடி
நா ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்னு
நீ சொன்ன கடசி வார்த்த……

அப்ப தானே நா முழுசா செத்துப் போனேன்…
போதும் புள்ள

நீ வெதச்ச நெனப்பெல்லாம்
என மனசோரம்
அழியாம நெறஞ்சிருக்க….

ஒனக்கொண்ணும் ஆகம..
நீ சொகமா இருக்கணும்
ஒன் கைபுடிக்கும் மகராசன்
ஒன் உசிராக இருக்கணும்….

எனக்கொன்னும் கொறவில்ல…
நாயிருப்பேன் கல்லாட்டம்…
நீயில்லாத நா கல்லு தானே….

ஓன் நெனப்போட நா இருப்பேன்.
என் உசிரு என்ன விட்டு போனாத்தான்…
ஒன் நெனப்பும் மறஞ்சி போகும்….

ஒரு வித்தியாசமான முயற்சி. கடந்த பதிவில் நான் மரித்தவன்னு ஒரு கவிதை எழுத முயற்சி செய்திருந்தேன். நிறைய நண்பர்கள் மின்னஞ்சலில் செல்லமாக கோபப்பட்டு கொண்டார்கள். இப்படியெல்லாம் எழுத வேண்டாம் என சில நண்பர்களின் மிரட்டலான வேண்டுகோள் வேறு( உனக்கென்ன வரிக்கு, வரி சொற்களை தனித்தனியாக போட்டால் கவிதை எழுதுறது என்று நினைப்போ... திரு ஃ திட்டியிருந்தார்). ஆனால் நான் மரணம் பற்றி எழுதியதில் தான் நிறைய பேர் கடிந்து கொண்டார்கள். சரி இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக.கிராமத்து நடையில் ஒரு கவிதை முயற்சி ( திரு ஃ நீங்கள் கட்டாயம் இதையும் வாசித்து உங்கள் உண்மையான கருத்தை சொல்லணும்). அப்பத்தானே நானும் கவிதை எழுதிப் பழக முடியும். கடந்த கவிதை வாசித்து பாராட்டியவர்கள், இதைப் போய் கவிதைன்னு எழுதியிருக்கியேனு, திட்டிட்டு போனவர்கள் எல்லாருக்கும் நன்றிகள். இதையும் வாசித்துவிட்டு அப்படியே கீழே ஆளுக்கு ஒரு வாக்கு போட்டுட்டு போயிடுங்க..

Comments

  1. புதுசாத் தான் இருக்கு.....ஆனால் கவிதையில் முயற்சியை விட அனுபவங்கள் பற்றிய பதிவுதான் அதிகமாகத் தெரிகின்றது.

    ReplyDelete
  2. பரவாயில்லையே அனுபவத்த நல்லா கவிதையில சொல்லி இருக்கீங்க. நல்லா தான் இருக்கு ம் ம்...........

    ReplyDelete
  3. kanner mattum kaivasam..... unaku puriyala...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற