Skip to main content

பித்து


அதோ அங்கே ஒரு உருவம்….
வெள்ளையுடை,
சிறகுகள்
கையில் மந்திரக்கோல்….
அந்தரத்தில் பறந்தபடி….
ஒரு சிறுமி…..
பள்ளியில் படித்த தேவதையைப் போல்….

நெருங்கிச் செல்கிறேன்.
மிக நெருங்கி….
வெள்ளையுடை இல்லை…
கையில் கோல் இல்லை…..
சிறகுகளை காணவில்லை….

கந்தல் உடை…
அகோரமாக….
கையில் இரத்தம் வடியும் குழந்தை
சிவந்த கண்கள்….
சிறகுகளுக்கு இருந்த இடத்தில்…. சிலுவையொன்று…

மெல்ல மெல்ல அசைகிறது
என்னை நோக்கி
அந்த சிறுமியின் உருவம்…..
ஒடத் தொடங்குகிறேன்…
ஓடிக்கொண்டேயிருக்கின்றேன்….
மிகநெருக்கமாய்
அந்த உருவம்….

மிக மிக நெருக்கமாய்…..
மண்டையோடுகளையும்….
அழுகுரல்களையும்…ஒநாய்களின் ஒலங்களையும் தாண்டி…
என் ஓட்டம் நிற்கவில்லை…..
ஆனால் மிக நெருக்கமாய் அந்த உருவம்…..

இப்போது இன்னும் விகாரமாய்…..
கையில் இருந்த குழந்தையை காணவில்லை…..
சிலுவையும் மறைந்துவிட்டது.

சிறகுகள்…மந்திரக்கோல்…வெள்ளையுடை….
என்னைத் தாண்டி அந்த உருவம் பறந்து செல்கின்றது..

களைத்து அமர்கிறேன்.
தோல்களில் சுமை…கையில் இரத்த வாடை…
என் கால்களை இறுக்கிப் பிடித்தவாறு அந்த குழந்தை…..
என்னைப் பார்த்து சிரிக்கின்றது…

எழ முயற்சிக்கிறேன்…
கால்கள் சுயநினைவற்று…..
கண்கள் இருள்கின்றன…..

தூரத்தில் ஒரு பாட்டி, ஒரு காகம், ஒரு நரி……
எங்கோ, இவர்களைப் பார்த்த ஞாபகம்…..

பக்கத்திலே ஒரு மான் பாய்ந்தோடுகின்றது…..
வில்லோடு ஒரு உருவம்……

தூக்குக் கயிறு, யூதாஸ்….
குரங்குகள், தொப்பி வியாபாரி, முட்டை மனிதன்…

எல்லாமே என்னைச் சுற்றி…..
நெருங்கி மிக நெருங்கி…..

நான் பறக்கிறேன்.
எனக்கும் சிறகுகள்
கையில் குழந்தை இல்லை…..
வெள்ளையுடை…..
கையில் கோல்…..

அம்மம்மா கதை சொல்லிக் கொண்டிருக்கிறாள்…
எதுவுமே கேட்கவில்லை…
எந்த மொழியும் எனக்கு புரியவில்லை..

அம்மாவின் கர்ப்பையில்…..
நீர்க்குடத்தில்.
அமைதியாய்…..

Comments

  1. புரியுது. ஆனா புரியல

    ReplyDelete
  2. புரியுது. ஆனா புரியல

    ReplyDelete
  3. திரில் படம் பார்த்த பிரமிப்பு உங்கள் நடையில்! ட்விஸ்ட் சூப்பர்! அழகு கவிதை!!

    ReplyDelete
  4. நன்றி நெல்லை. எஸ். சரவணகுமார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற...

அம்புகளும், சில ஆண்டவர்களும்

எங்கிருந்தோ வந்து விழுந்த அம்பு மரமொன்றில் கீறி காயம் செய்தது அந்த அம்பு முன்பொரு நாளில் அதே மரத்தில் கிளையொடித்து தீட்டப்பட்டதாம் அதுவே, பின்பொரு நாளில் மரத்தில் கீறி காயம் செய்ததாம்! காடுகள் சுற்றி தேடுதல் செய்து, கதைகள் பல சொல்லி தீட்டப்பட்ட, தீட்டப்படாத அம்புகள் சில அடைத்து வைக்கப்பட்டன… காலங்கள் ஓடி ஒழிய இன்றைப் போல் ஒரு பொழுதில், அடைத்த அம்புகள் சிலவற்றின் கூர் முனைகள் ஒடிக்க மரம் வளர்க்கும் ஆண்டவர் விரும்பினராம்! ஒன்றைப் போல் வேறு மரத்தில் விளைந்த இந்த அம்புகள் முனை ஒடிக்கப்படும் செய்தி அறிந்து, அந்த மரத்தின் சக அம்புகளும், கிளைகளும், கொடிகளும், வேரைப் போன்ற விழுதுகளும் வீதியிறங்கி குரல் எழுப்புகின்றனவாம்! எதுவாயினும், நாளைப் போல் ஒரு நாளில் எதுவும் நடக்கலாம்! அம்புகள் கூராக்கப்படுவதும், விற்கள் வளைக்கப்பட்டு ஆண்டவரால் அனுப்பி வைக்கப்படுவதும் பின் மாறி, ஆண்டவர் தலைகளைப் பதம் பார்ப்பதும், எதுவும் நடக்கலாம் ….. (இது அரசியல் கவிதை அல்ல)

கந்தசாமி – அப்படியும், இப்படியும்…

க ந்தசாமி … சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக விக்ரம் ரசிகர்களையே காத்திருக்க வைத்த திரைப்படம் . கடைசியாக வெளிவந்த விக்ரமின் “ பீமா ” திரைப்படம் பாரிய வெற்றியை சந்தித்திருக்காத நிலையில் , புதிய இயக்குநர்களின் வரவு , சூர்யா போன்றோரின் அர்ப்பணிப்புடனான நடிப்பு போன்ற பல போட்டிகளுக்கு மத்தியில் கந்தசாமி படம் வெளிவந்திருக்கின்றது . படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே பல பிரமாண்டங்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் அதிகரித்திருந்தன . படபூஜைக்கான அழைப்பிதழ் , படப் பாடல் வெளியீட்டின் போது கிராமங்களை தத்து எடுத்தமை என ஆரம்பம் அதிரடியாக இருந்த நிலையில் , படவெளியீடும் 1000 பிரதிகளுடன் பிரமாண்டமாகவே இருந்தது . தர்க்கரீதியாக பல ஓட்டைகள் நிறைந்த 3 மணித்தியாலங்கள் நீளமான படத்தின் கரு மிகவும் பழைய கதை . சங்கரின் படங்களில் பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட விடயம் . மிக அண்மையில் சிவாஜியில் கூட இந்த விடயம் தான் கூறப்பட்டிருந்தது . கருப்பு பணத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் முறை . சற்று மாறுப்பட்ட முறையை சுசிகணேசன் கந்தசாமிய...