Skip to main content

பித்து


அதோ அங்கே ஒரு உருவம்….
வெள்ளையுடை,
சிறகுகள்
கையில் மந்திரக்கோல்….
அந்தரத்தில் பறந்தபடி….
ஒரு சிறுமி…..
பள்ளியில் படித்த தேவதையைப் போல்….

நெருங்கிச் செல்கிறேன்.
மிக நெருங்கி….
வெள்ளையுடை இல்லை…
கையில் கோல் இல்லை…..
சிறகுகளை காணவில்லை….

கந்தல் உடை…
அகோரமாக….
கையில் இரத்தம் வடியும் குழந்தை
சிவந்த கண்கள்….
சிறகுகளுக்கு இருந்த இடத்தில்…. சிலுவையொன்று…

மெல்ல மெல்ல அசைகிறது
என்னை நோக்கி
அந்த சிறுமியின் உருவம்…..
ஒடத் தொடங்குகிறேன்…
ஓடிக்கொண்டேயிருக்கின்றேன்….
மிகநெருக்கமாய்
அந்த உருவம்….

மிக மிக நெருக்கமாய்…..
மண்டையோடுகளையும்….
அழுகுரல்களையும்…ஒநாய்களின் ஒலங்களையும் தாண்டி…
என் ஓட்டம் நிற்கவில்லை…..
ஆனால் மிக நெருக்கமாய் அந்த உருவம்…..

இப்போது இன்னும் விகாரமாய்…..
கையில் இருந்த குழந்தையை காணவில்லை…..
சிலுவையும் மறைந்துவிட்டது.

சிறகுகள்…மந்திரக்கோல்…வெள்ளையுடை….
என்னைத் தாண்டி அந்த உருவம் பறந்து செல்கின்றது..

களைத்து அமர்கிறேன்.
தோல்களில் சுமை…கையில் இரத்த வாடை…
என் கால்களை இறுக்கிப் பிடித்தவாறு அந்த குழந்தை…..
என்னைப் பார்த்து சிரிக்கின்றது…

எழ முயற்சிக்கிறேன்…
கால்கள் சுயநினைவற்று…..
கண்கள் இருள்கின்றன…..

தூரத்தில் ஒரு பாட்டி, ஒரு காகம், ஒரு நரி……
எங்கோ, இவர்களைப் பார்த்த ஞாபகம்…..

பக்கத்திலே ஒரு மான் பாய்ந்தோடுகின்றது…..
வில்லோடு ஒரு உருவம்……

தூக்குக் கயிறு, யூதாஸ்….
குரங்குகள், தொப்பி வியாபாரி, முட்டை மனிதன்…

எல்லாமே என்னைச் சுற்றி…..
நெருங்கி மிக நெருங்கி…..

நான் பறக்கிறேன்.
எனக்கும் சிறகுகள்
கையில் குழந்தை இல்லை…..
வெள்ளையுடை…..
கையில் கோல்…..

அம்மம்மா கதை சொல்லிக் கொண்டிருக்கிறாள்…
எதுவுமே கேட்கவில்லை…
எந்த மொழியும் எனக்கு புரியவில்லை..

அம்மாவின் கர்ப்பையில்…..
நீர்க்குடத்தில்.
அமைதியாய்…..

Comments

  1. புரியுது. ஆனா புரியல

    ReplyDelete
  2. புரியுது. ஆனா புரியல

    ReplyDelete
  3. திரில் படம் பார்த்த பிரமிப்பு உங்கள் நடையில்! ட்விஸ்ட் சூப்பர்! அழகு கவிதை!!

    ReplyDelete
  4. நன்றி நெல்லை. எஸ். சரவணகுமார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….